Tuesday 19 June 2018

கேள்வி - பதில் (80)


கேள்வி

நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்தும்  பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகரைக் கைது பண்ண முடியவில்லையே!

பதில்

கைது செய்ய முடியாது என்பது தான் இந்தியப் பிரதமர் மோடியின் ஆட்சியின் சிறப்பு. அதுவும் பிராமணர்களைக் கைது செய்ய காவல்துறைக்கு அதிகாரமில்லை. சாதாரண ஏழை, எளிய மக்களை காவல்துறையினர் அடிக்கலாம், உதைக்கலாம், கைது செய்யலாம்! இப்போது காவல்துறை அதைத்தான் செய்கிறது! தூத்துக்குடியில் நடந்த சம்பவங்கள் அதைத்தான் சுட்டுகின்றன.

இப்போது தமிழ் நாட்டில் மட்டும் அல்ல பொதுவாக இந்தியாவில் பிராமணர்கள் செய்கின்ற தவறுகள் அனைத்தும் மறைக்கப்படுகின்றன. குற்றவாளிகளைத் தெரிந்தாலும் கூட அவர்கள் கைது செய்யப்படுவதில்லை!  காஷ்மீரில் நடந்த சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்த சம்பவம் அதற்கான சான்று.   சம்பந்தப்பட்ட அனைவரும் உயர் சாதிக்காரர் என்பதால் இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை! ஒவ்வொரு நாளும் சமய ரீதியாக பலர் தாக்கப்படுகின்றனர். ஆனால் எந்தக் கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை! 

எஸ்.வி.சேகர் இதையெல்லாம் அறியாதவரா, என்ன? தமிழ் நாட்டில் பா.ஜ.க. வைச் சேர்ந்தவர்கள் பலர் எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறோமோ அதனையே அவர்கள் எல்லாம்  செய்கிறார்கள்! எதையெல்லாம்  பேசக்கூடாது என நினைக்கிறோமோ அதனையெல்லா அவர்கள்  பேசுகிறார்கள்!

எஸ்.வி. சேகருக்கு இப்போது நல்ல நேரம். தினசரி மேடை  நாடகம் நடத்திக் கொண்டிருந்தவர் இப்போது காவல்துறை வாகனத்திலேயே காவல்துறையின் பாதுகாப்போடு நகர ஊர்வலம் வந்து கொண்டு இருக்கிறார்! இது போன்ற ராஜ உபசாரம் அவருக்கு எந்தக் காலத்திலும் கிடைத்ததில்லை!

ஆனால் ஒன்று. யார் செய்தாலும் தவறு தவறு தான். அதற்கான தண்டனையிலிருந்து தப்ப வழியில்லை!  துக்ளக் சோ பிராமண சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர். கடைசி காலத்தில் ஜெயலலிதாவின் சாராயக் கம்பெனிகளுக்கு அவர் தான் தலைவர்! ஜீரணிக்க முடியவில்லை!


No comments:

Post a Comment