Thursday 26 May 2022

திறன் அற்றவரா நாம்?

 

நம் சமுதாயம் திறனற்ற ஒரு சமுதாயமா? நம் இளைஞர்கள் எந்தவொரு திறனும் இல்லாதவர்களா? இப்படிப் பல கேள்விகளை நாமே கேட்டுக் கொள்வது நல்லது.

நம் இளைஞர்கள் இயற்காகவே பல திறன்களைக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். ஒன்றுக்கும் உதவாதவர்கள் அல்ல.  

இப்போது நாட்டில் பலவிதத்  திறன் பயிற்சிகள் நாடெங்கிளும்  நடந்து கொண்டிருக்கின்றன. பல கல்லூரிகள் இயங்குகின்றன. பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இது போன்ற பயிற்சிகளின் மூலம் பயன்பெற்றுக் கொண்டிருக்கின்றனர். எங்கும் கிடைக்காத பயிற்சிகள் அங்கு அவர்களுக்குக் கிடைக்கின்றன.

நமது இளைஞர்களுக்கு என்ன தான் திறமைகள் இருந்தாலும் முறையான பயிற்சிகளே அவர்களுக்கு முழுமையான திறமைகளைக் கொண்டு வரும். அதே வேளையில் வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கும். நமக்குத் திறன் இருக்கிறதோ இல்லையோ நிறுவனங்கள் கல்விச்  சான்றிதழ்களுக்குத் தான் முதலிடம் கொடுப்பார்கள்.

பொதுவாகப் பார்த்தால் நமது இளைஞர்கள் பன்முகத் திறமையாளர்களாகவே இருக்கின்றனர். ஆனால் தங்களது திறமைகளைப் பணம் ஆக்கும் வித்தைகளை அவர்கள் கற்றுக் கொள்ளவில்லை. அது ஒரு பெரிய குறைபாடு.

சீனர்களிடம் நம்மிடம் இல்லாத ஒரு திறமை அவர்களிடம் உண்டு. கொஞ்சம் தெரிந்தால் போது அந்தத் திறனை வைத்து சம்பாதிக்க ஆரம்பித்து விடுவார்கள். எல்லாம் தெரிந்தது போல் காட்டிக் கொள்வார்கள். நமக்கு எல்லாம் தெரிந்தும் ஒன்று தெரியாதவர் போல் ஒதுங்கிக்கொள்ள வேண்டி வரும்.

இளைஞர்களே! உங்களுடைய திறன்களை நான் மதிக்கிறேன். உங்களுடைய திறன் என்பது உங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். அதற்கு முழுமையான தொழில்நுட்ப பயிற்சி பெற வேண்டும். நாட்டில் நிறையவே வாய்ப்புக்கள் குவிந்து கிடக்கின்றன.  அவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களை யாரும் ஒதுக்கவில்லை. நீங்களே ஒதுங்கிக் கொள்ளாதீர்கள். வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன.

நம் திறனை உலகத்திற்குக் காட்ட வேண்டும். நாம் உயர்ந்தவர்கள் என்பதை நிருபிக்க வேண்டும்.

இளைஞர்களே!  அனைத்தும் உங்கள் கையில்!

No comments:

Post a Comment