Saturday 2 September 2023

புதிய அதிபருக்கு வாழ்த்துகள்!

 

                     சிங்கப்பூர் அதிபர், தர்மன்  சண்முகரத்தினம்

சிங்கப்புர் நாட்டின் அதிபராக தர்மன் சண்முகரத்தினம்  தெர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.  

 வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கபட்ட அவருக்கு  மக்களின் ஆதரவு சுமார் எழுபது விழுக்காட்டுக்கு மேல்  என்பது,  அதுவும்  சீனர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூரில்,  எதிர்பார்க்க முடியாத ஒன்று. எப்படியிருப்பினும் அது மக்களின் தீர்ப்பு. தமிழர் ஒருவருக்கு  இந்த அளவு வரவேற்பு கிடைத்திருப்பது  உலகத்தமிழர்களுக்கு  மகிழ்ச்சியளிக்கும்  விஷயமாகும்.  தமிழர்களின் திறமைக்கு இது ஒன்றே போதும்.

அவருக்கு எதிராக போட்டியிட்ட இருவருமே சீனர்கள். அதில் ஒருவருக்கு  16 விழுக்காடும்  இன்னொருவருக்கு 14 விழுக்காடு வாக்குகளுமே கிடைத்தன.

திரு தர்மன் அவர்களின் பதவியேற்பு சடங்கு, இப்போதைய அதிபர் ஹாலிமா யாகோப்  பதவி காலம் முடிந்த பின்னரே நடைபெறும். அவருடைய பதவி காலம் 13.9.2023  அன்று முடிவடைகிறது. புதிய அதிபரின்  பதவியேற்பு  அடுத்த நாள் 14.9.2023 அன்று நடைபெறும். 

சிங்கப்பூர் நாட்டின் ஒன்பதாவது அதிபராக திரு தர்மன்  விளங்குகிறார்.  அவர் இலங்கைத் தமிழர். சிங்கப்பூரில் பிறந்தவர். அவருக்கு  மனைவியும் நான்கு குழந்தைகளும் இருக்கின்றனர். மனைவி ஜப்பானிய-சீன வம்சாவளியைச் சார்ந்தவர். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர். சட்டம் படித்தவர்.

அதிபராக பதவியேற்கும் திரு தர்மன் அவர்கள் உலகத் தமிழர்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் மனிதர். சீனர்கள் அதிகமாகக் கொண்ட  ஒரு நாட்டில் ஒரு தமிழராலும் அதிபராக முடியும் என்பதை எண்பித்திருக்கிறார். உலகத் தமிழர்களுக்கு ஓர் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறார்.

தமிழர்கள் உலக அளவில் பல நாடுகளில் பெரும் பதவிகளில் அமர்ந்திருக்கின்றனர்.  அவர்களது திறமைகளைப் பல நாடுகள் அங்கீகரித்திருக்கின்றன.  இன்றளவும் அவர்கள் பல உயர் பதவிகளை வகிக்கின்றனர். வருங்காலங்களில் தமிழர்கள் இந்த உலக ஆள்வர் என்பது திண்ணம்.

No comments:

Post a Comment