Thursday 2 November 2023

ஸாகிர் நாயக் அவதூறு வழக்கு!

 

பேராசிரியர் டாக்டர் இராமசாமி- ஸாகிர் நாயக்  அவதூறு வழக்கில் என்ன நடந்தது என்பதை இப்போது பெரும்பாலோர் அறிந்திருக்கின்றனர்.

பேராசிரியர்,  ஸாகிர் நாயக்கிற்கு ,  பதினைந்து இலட்சம் ரிங்கிட்  இழப்பீடாக  ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஸாகிர் நாயக் ஒருசில ஆண்டுகளுக்கு முன்னர்  எந்த அளவுக்கு இஸ்லாம் அல்லாத   மற்ற மதத்தினரை இழித்தும் பழித்தும் பேசியவர் என்பதை நாம் அறிவோம். அதிகமாக இந்துக்களையும், இந்தியர்களையும்  கேவலமாகப் பேசியவர்.  அவரும் ஓர் இந்தியர் அதுவும் வட இந்தியர் என்பதையும் மறக்க வேண்டாம்.

அதற்காகவே அவருக்கு எதிராகப் பேசிய பேராசிரியர் மீது  ஸாகிர் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின்  எதிரோலி தான்  இந்த இழப்பீடு.

இப்போது இந்த இழப்பீடான  15 இலட்சத்தை  ஒரு மாதத்திற்குள் கட்ட வேண்டும் என்பது நீதிமன்றத்தின் ஆணை. 

எது எப்படியோ அவர் மீது ஒரு சிலருக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அது அர்சியல்  ரீதியாகவும் இருக்கலாம்.  காரணம் நமக்குப் புரியும். அன்றும் சரி இன்றும் சரி இந்தியர்களுக்காக யாரும் வாய் திறக்காத ஒரு காலகட்டத்தில்  அவர் இந்தியர்களுக்காகப் பேசினார். இந்து மதத்தினரூக்காகப்  பேசினார். இப்பவும் பேசியும் எழுதியும் வருகின்றார்.

அந்த வழக்கிற்காக பொது மக்களிடமிருந்து நிதி திரட்டும் இயக்கம்  ஒன்றை  மலேசியர் தமிழர் உதவும் குரல் தொடங்கியிருக்கிறது.  இதுவரை ஒரு இலட்சத்திற்கும் மேல் நிதி திரட்டியும் இருக்கிறது. இன்னும் தொடர்ந்து கொண்டும் இருக்கிறது. 

பேராசிரியர் இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் குரலாக ஒலித்தவர்.  எனக்காகவா? உனக்காகவா? என்கிற கேள்விகள் வேண்டாம்.  தனிப்பட்ட முறையில்  எனக்காக ஒன்றுமில்லை. அது அவசியமும் இல்லை. ஆனால் நம் அனைவருக்குமாகவும் அவர் பேசினார். நம் வருங்கால தலைமுறைகளுக்காக  அவர் பேசினார்.

ஒன்றை சாவசகமாக மறந்துவிட வேண்டாம்.  அன்று ஸாகிருக்கு எதிராக பேராசிரியர்   குரல் எழுப்பவில்லை என்றால் இன்றும் ஸாகிர் தனது வீரதிரச் செயல்களைக் காட்டிக் கொண்டிருப்பார்!  அவர் வாயை அடைத்தவர்  பேராசிரியர் என்பதை மறந்துவிட வேண்டாம். அதனால் தான் இன்று மௌனியாக இருக்கின்றார்!

நம் ஒற்றுமையை நாம் காட்ட வேண்டும். அப்படிக் காட்டுவதன் மூலம்  தான் இது போன்ற ஈனச்செயல்கள் மேலும் நடக்காமல் இருக்கும்.

உங்களுடைய நன்கொடைகளை மேலே குறிப்பிட்ட  வங்கிக்கு அனுப்பி வையுங்கள்.

நல்லதே நடக்கும்!

No comments:

Post a Comment