Saturday 25 November 2023

"உரிமை" தொடக்க விழா!

 

இந்தியர்களுக்கான ஓரு புதிய கட்சி  உருவாகிவிட்டது.

வாழ்த்துகள்!  பெரும் எதிப்பார்ப்புடன் தொடங்கப்பட்டிருக்கிறது உரிமை என்னும் அரசியல்  கட்சி.   15-வது பொதுத் தேர்தலில் அன்வார் இப்ராகிம்  நமது நாட்டின்  பிரதமராக வரவேண்டும் என்று எப்படி நாம், இந்தியர்கள் ஒன்று சேர்ந்தோமோ, அதே வேகத்தில்  தொப்பென்று என்று போட்டோமோ, இப்போது அதே வேகத்தில்  புதிய கட்சி  ஆரம்பிக்கவும் தயார் நிலையில் உள்ளோம்.  கட்சி ஆரம்பித்தும்  விட்டோம்.

என்னைக் கேட்டால் இந்த வேகம் நமக்குத் தேவை தான்.  இனியெல்லாம் அறுபது எழுபது ஆண்டுகள்  காத்திருக்க வேண்டிய அவசியமில்லை! உடனுக்குடன், சூடோடு சூடாக, நாம் செயல்பட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

ம.இ.கா. பணம் உள்ளவர் கட்சி.  பி.கே.ஆர். மலாய்க்காரர் கட்சி. ஜ.செ.க. சீனர்கள் கட்சி. பிரதமர் அன்வார் சமீபத்தில் கூறியது போல  இனி பி.கே.ஆர். கட்சி  மலாய்க்காரர் தான்  நமக்குத் தலைமை தாங்கப் போகிறார்கள். இந்தியர் யாரும் தலைவராக வர வாய்ப்பில்லை!  ஆக இந்தியர் பிரச்சனைப் பற்றி யாரும் கவலைப்பட போவதில்லை.

இந்த நிலையில் உரிமை என்னும் இந்த இந்தியர் கட்சியைத்தான்   நாம் நமம்புகிறோம்.  பல்லின மக்களைக் கொண்ட கட்சிகளை  நாம் நம்பினோம்/  ஆனால் அந்தக் கட்சிகள் நம்மை  மனிதனாகக் கூட மதிக்கவில்லை.  அது நமது குற்றம் அல்ல.  பல்லின கட்சிகள் இந்தியர்களின் பிரச்சனைகளைப் பற்றிப்  பேச  வேண்டிய அவசியமில்லை.  அவர்கள் மலேசியர்களுக்காகத்தான்  பேச வேண்டும். ஆனால் அப்படி யாரும் பேசுவதாகத் தெரியவில்லை. அவர்கள் மலாய்க்காரர்களுக்காகப் பேசுகிறார்கள்.  சீனர்களுக்காகப் பேசுகிறார்கள்.  இந்தியர் என்று வரும் போது அது பற்றி யாரும் வாய் திறப்பதில்லை! 

இதைத்தான் சமீப காலமாக கண்டு வருகிறோம்.  ஏன்?  பிரதமரே மலாய்க்காரர் பிரச்சனைப் பற்றி பேசினால் தான் அவர்களின் ஆதரவு தனக்குக்  கிடைக்கும் என பகிரங்கமாகவே பேசுகிறார்!  ஆக, ஒன்றைப் புரிந்து கொண்டோம். இனி யாரையும் நம்புவதாக இல்லை. நம் கையே நமக்கு உதவி.

நாம் ஏன் 'உரிமை' கட்சி மீது  அதீத நம்பிக்கை வைத்திருக்கிறோம். பத்தோடு பதினொன்று என்று போயிருக்கலாமே?  அப்படியல்ல.  பேராசிரியர் இராமசாமி  அவர்களின் மீது உள்ள நம்பிக்கை. அவர் ஒரு நல்ல சேவையாளர்  என்கிற பெயர் எடுத்தவர்.  இப்போது நமக்குத் தேவை எல்லாம்  நமது பிரச்சனைகளைப் புரிந்து கொண்டவர்கள் தான். அதனால் தான் நம்து தமிழ் மக்கள் அவரை நம்புகிறார்கள்.   அவர் மீது யாரேனும் குற்றம் கண்டு பிடிக்கிறார்கள் என்றால் அவர்கள் தமிழர்கள் அல்ல  என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

உரிமை கட்சி என்பது நமது எதிர்காலம். யாராவது துணிந்து இறங்க வேண்டும் என்று நாம் எதிர்ப்பார்த்தோம். பேராசிரியர் வாராத வந்த மாமணியென வந்திறங்கியிருக்கிறார்.  அவருக்கு ஆதரவு வழங்குவது  நமது கடமை.  மற்றபடி நமது கடமைகளை நாம் செய்வோம்! நாமும் முன்னேற வேண்டும். நாடும் முன்னேற வேண்டும்!

No comments:

Post a Comment