Saturday 27 January 2024

அந்திமகாலத்தின் புலம்பல்கள்!

 டாக்டர் மகாதிர் இன்னும் செய்திகளில் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறார். ஒரே வித்தியாசம். அப்போது அது செய்திகளக இருந்தன.  இப்போது அந்திமகாலத்தின் புலம்பல்களாக இருக்கின்றன! அது தான் வித்தியாசம்.

வயதில் பெரியவர் என்பதால் நாம் இன்னும் அவரை மதிக்கிறோம். ஆனால் சமீபகாலமாக அவரின் பேச்சுக்கள் புலம்பல்களாக மாறிவிட்டன! குற்றம் நம்முடையது அல்ல, அவருடையது தான்.

என்று ஊழல் ஆணையம் தன் மேலும் தன் குடும்பத்தின் மேலும், தன் நண்பர்கள் மேலும்  நடவடிக்கை எடுக்க ஆரம்பித்ததோ அப்போதே புலம்ப ஆரம்பித்துவிட்டார் பெரியவர். தான் செய்த தவற்றுக்கெல்லாம் சீனரையும் இந்தியரையும் குறை சொல்ல ஆரம்பித்துவிட்டார்! 

அதாவது இந்த மூத்த வயதிலும் நாட்டின் அரசியலை திசை திருப்ப முயற்சி செய்கிறார்.  ஆனாலும் இப்போது அவரது நேரம் அவருக்குச் சாதகமாக இல்லை.  மாமன்னர்   அவருக்கு ஆதரவாக இல்லை. இருந்தால் அரசாங்கத்தை இந்நேரம் கவிழ்த்திருப்பார்!

அவருடைய சொந்தப் பிரச்சனையை ஏதோ நாட்டின் விபரீதமான பிரச்சனையாகப் பேசி வருகிறார்!  நல்ல வேளை அவருடைய பேச்சுக்கு  அவர் சார்ந்த  சிறு கூட்டம்  மட்டுமே தலையை ஆட்டுகிறது!  மற்றவர்கள் பெரியவரின் புலம்பல் என்பதாகவே எடுத்துக் கொள்கின்றனர்.

ஆனாலும் அவர் அடங்கி விடுவார் என்பதற்கான அடையாளம்  ஏதுமில்லை. இன்னும் விஷத்தைக் கக்குவதற்கு நிறைய சரக்குகள் அவரிடம்  உண்டு. எல்லாமே இந்தியர், சீனர் சம்பந்தப்பட்டது தான்!  நாட்டில் ஒற்றுமை கூடாது என்பதில் அவர்  ஆர்வமாக இருக்கிறார்!  மலாய்க்காரர்களைத் தூண்டிவிடும் வேலையில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்.  அதெல்லாம் அந்தக் காலத்தில்  அவர் அரசியலில் கால் எடுத்து வைத்த போது அந்த யுக்தி அவருக்கு வேலை செய்தது. இப்போது அதெல்லாம் பயன் தராது என்பது  இன்னும் அவருக்குப் புரியவில்லை. காரணம் அவரைப் போலவே மற்றவர்களும் திருப்தியோடு தான் இருக்கிறார்கள்!  அது போதுமே! கலவரத்திற்கு வாய்ப்பில்லையே!

இன்னும் என்ன புதிய யுக்திகள் அவரிடம் இருக்கின்றன என்பது கூடிய விரைவில் நமக்குத் தெரியவரும்.  அவர் சும்மா இருக்கப் போவதில்லை. எதையாவது சொல்லிக் கொண்டு தான் இருப்பார். நாமும் ஏதோ ஒரு கிழவரின் புலம்பல் என்பதாகத்தான்  அந்த உளறல்களை எடுத்துக் கொள்வோம்!  வேறு என்ன முக்கியத்துவம் இருக்கப் போகிறது?

நல்லதை அவர் நாட்டுக்குச் செய்திருந்தால் எல்லாம் நல்லது நடக்கும். இல்லாவிட்டால் அதனைப் புலம்பலாகத்தான்  நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்!

No comments:

Post a Comment