Wednesday 31 January 2024

வியாபாரம் யார் கையில்?

 

நம் மலேசிய நாட்டின் சிறு தொழில்கள் யார் கையில்?  மார்க்கெட்டுகளுக்குப் போனால்  யாரிடம் பொருட்களை வாங்குகிறோம்?

முன்பெல்லாம் சீனர்கள் வியாபாரங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார்கள்.  ஓரளவு மலாய்க்காரர்களும் இந்தியர்களும்  ஏதோ ஒன்றிரண்டு என்கிற வகையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

இன்றைய நிலைமை என்ன?  மலேசியர்கள் ஓரங்கட்டப்பட்டு  அதனை வங்காளதேசிகள் தங்களது கையில் எடுத்திருக்கிறார்கள்! இதெல்லாம் அரசாங்கத்திற்குத் தெரியாமலா நடக்கிறது? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாருக்கும் தெரிந்து தான் நடக்கிறது!

அரசாங்கம் என்ன சொல்லுகிறதோ தெரியாது. நாம் சொல்லுவதெல்லாம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு பெருந்தன்மையோடு நடந்து கொள்கிறார்கள் என்பது தான்! அப்படி இல்லையென்று சொன்னால்  இது எப்படி நடக்கும்?   

ஆனால் ஒன்று. இப்படியெல்லாம் மற்ற நாடுகளில் நடக்குமா?  நடக்க வாய்ப்பில்லை.   வெளிநாட்டவர்களுக்குத் தொழில் செய்ய வாய்ப்பில்லை. உள்நாட்டவர்களுக்கே முதல் சலுகை. நம் நாட்டில் மட்டும் இப்படி ஏன் நடக்கிறது என்பது நமக்குப் புரியவில்லை! எங்கே கோளாறு?  என்ன கோளாறு?  இதற்குக் காரணமானவர்கள் யார்.

டாக்டர் மகாதிர் காலத்தில் தான் இந்தப் பிரச்சனைகள் எல்லாம் உருவாக  ஆரம்பித்தன.  நாட்டின் மீது அவருக்கு இருந்த விசுவாசம் இப்படியெல்லாம் அவரைச் செய்ய வைத்தது!   உள்நாட்டவரை அவர் நம்பவில்லை. வெளிநாட்டவரை அவர் நம்பினார்.  அதன் விளைவு தான் இப்போது நடக்கும் இந்த அராஜகங்கள்.  வேலைக்காக அவர்களை நாட்டுக்குள் விட்டாலும் இந்த நாட்டில் வியாபாரம் செய்கின்ற அளவுக்கு அவர்களின் கை ஓங்கவைத்ததற்கு டாக்டர் மகாதிர் தான் காரணம். அன்று அவர் கண்டிப்பு காட்டியிருந்தால்  இன்று இது போன்ற செயல்கள் எல்லாம் நடைபெற வாய்ப்பில்லை. இலஞ்சம்  ஊழல் என்று வந்த பிறகு  வெளிநாட்டவர் அதனைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்! எல்லாம் டாக்டர் மகாதிர் செயல் என்பதைத் தவிர  வேறு யாரையும் குற்றம் சொல்ல இயலவில்லை!

இப்போது சிறு சிறு வியாபாரங்கள் அனைத்தும்  வெளிநாட்டவர் கையில்! அதனால் விலையேற்றத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை. மலேசிய மக்கள் இப்போது  வெளிநாட்டவர் கட்டுப்பாட்டில்!

அன்று வெள்ளையனுக்கு இடம் கொடுத்தது போல இன்று வங்காளனுக்கு  இடம் கொடுத்துவிட்டோம்!  மாட்டிக் கொண்டோம்!

No comments:

Post a Comment