Thursday 1 February 2024

ஊழல் மலிந்துவிட்டதா?


 நாட்டில் ஊழல் மலிந்துவிட்டதா என்று கேட்டால் அதற்கான பதில் வெறும் 'ஆம்!' இல்லை! எத்தனை 'ஆம்!' வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்! அந்த அளவுக்கு நாட்டில்  ஊழல் மலிந்துவிட்டது!

இந்த அபரிதமான ஊழல் வளர்ச்சிக்கு  யார் காரணம்?  வேறு யாரும் அல்ல.  நாட்டின் மிகப்பெரிய விசுவாசியான, நாட்டுப்பற்று மிக்க, இனப்பற்றுமிக்க முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிரைத் தவிர  வேறு யாரைக் குற்றம் சாட்ட முடியும்?

இதில் அதிசயம் என்னவென்றால்  இவருக்குப் பின் வந்தவர்களும் அவரது வழியை முற்றிலுமாக பற்றிக் கொண்டனர் என்பது தான்!  யாரும் அதனை விடத் தயாராக இல்லை என்பது சோகம்!

இன்று நாட்டில் வெளிநாட்டவரின் அதிகமான  எண்ணிக்கைக்குக் காரணம் இந்த ஊழல் தான்.  அதனை ஒழிக்க ஏன்  யாரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றால் அதில் ஒரு சிலருக்குப் பணம் கொட்டோ கொட்டு என்று  கொட்டுகிறது!   அந்த வருமானத்தை எப்படி தடுப்பது?   தடுக்க வழி தெரியவில்லை அதனால் வெளிநாட்டவரின் வருகை  பொறாமை  அளிக்கும் அளவுக்கு மிஞ்சிவிட்டது! 

இப்போது நமது பத்தாவது பிரதமர், அன்வார் இப்ராகிம் வருகைக்குப் பின்னர் தான் இலஞ்சம், ஊழலுக்குக் காரணமானவர்கள் மீது  சட்டம் பாய ஆரம்பித்திருக்கிறது!  அதனால் தான்  இத்தனை ஆண்டுகள்  சட்டத்தையே மதிக்காத  ஆண்ட அரசியல்வாதிகள் இப்போது கதற ஆரம்பித்திருக்கின்றனர்!   விசுவாசமில்லை,  ஒற்றுமை இல்லை,  அழிந்துவிடுவோம்  என்றெல்லாம் ஒப்பாரி வைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

மலாய்க்காரர்கள் அழிந்துவிடுவார்கள் என்று பேசும் டாக்டர் மகாதிர் தான்  இந்த இலஞ்ச ஊழலின் தந்தை என்று அடித்துக் கூறலாம். அவர்  தான் நாட்டை அழித்தவர், கல்வியை அழித்தவர், ஒற்றுமையை அழித்தவர் எல்லாவற்றையும் விட நாட்டின் மாண்பை அழித்தவர்! உலக அரங்கில் நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியவர்.

ஒரு காலத்தில் மலேசியா என்றாலே  வலிமையான நாடு  என்கிற பெயர் இருந்தது.   இப்போது எதுவும் இல்லை. ஏதோ  வங்காளதேசம் போல் காட்சியளிக்கிறது!  இந்த ஊழல்வாதிகளினால் நாட்டில் வேலை இல்லை! நமது  இளைஞர்கள் வெளிநாடுகளை நோக்கி ஓடுகின்றனர். 

இப்போதுள்ள நிலைமையில் ஊழலை ஏற்றுமதி செய்யலாம்!

No comments:

Post a Comment