Saturday 10 June 2017

நாயர், மேனன், ஐயர்......!


தமிழரிடையே ஜாதியை ஒழிக்க முடியுமா என்பது இன்னும் புரியாத புதிர்.  என்ன தான் அடித்து துவைத்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் அது போய் விடும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் குறைந்து வருகிறது என்பது நம்பிக்கை தரும் செய்தி.

தங்களின் பெயரின் முன்னே இப்போதெல்லாம் யாரும் தங்களுடைய ஜாதியை இணைத்துக் கொள்ளுவதில்லை. அப்படி இணைத்துக் கொள்ளும் போது அதனைக் கேவலமாகப் பார்க்கின்ற ஒரு நிலைமையில் தான் நாம் இருக்கிறோம். அதுவே தமிழரிடையே ஒரு பெரிய வெற்றி என்று பெருமைப் படலாம்.

ஆனாலும் இப்போது கேரளா பக்கம் இருந்து வருபவர்கள் - அதுவும் குறிப்பாக பணம் சம்பாதிக்க தமிழ்ச் சினிமா  பக்கம்  வருபவர்கள் - மீண்டும் ஜாதியை தமிழ் நாட்டு மக்களிடையே திணிக்கப் பார்க்கிறார்களோ என்று ஐயுற வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

ஒரு நடிகை பார்வதி நாயர் என்னும் பெயரோடு தமிழ்ச் சினிமா உலகை வலம் வருகிறார். இன்னும் லட்சுமி மேனன், கௌதம் மேனன், நித்தியா மேனன் - இப்படிப் பல மேனன்கள்.  இப்போது ஐயர்களும் தமிழ்ச் சினிமா உலகை ஆள ஆரம்பித்து விட்டார்கள்! ஜனனி ஐயர் என்று ஒரு நடிகை அதே போல ஒரு பின்னணி பாடகி மகாலட்சுமி ஐயர்!

இது நாள் வரை தமிழ்ச் சினிமா உலகில் இந்த நாயர், மேனன், ஐயர், ஐயங்கார் எல்லாம் இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. இப்படியெல்லாம் ஜாதியைப் பயன்படுத்தாமலேயே அவர்களின் ஆதிக்கத்தில் தான் இந்த சினிமா உலகம் இருந்தது. இப்போதும் இருக்கிறது.

இப்போது ஏன் இவர்கள் ஜாதியைப் போட்டுத்தான் பிழைப்பு நடத்த வேண்டும் என்னும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்? அல்லது தமிழ் நாட்டிற்குள் ஜாதியை மீண்டும் புதுப்பிக்கிறார்களா?

எப்படிப் பார்த்தாலும் இது வரவேற்க வேண்டிய ஒரு விஷயம் அல்ல. ஜாதி ஒழிய வேண்டும் என்று இன்னும் கரடியாய் கத்திக் கொண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம்.  இது போன்ற செய்கைகள் மற்றவர்களையும் ஊக்கப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

என்ன செய்யலாம்? ஒன்று இவர்களைப் புறக்கணியுங்கள். இவர்களின் படங்களைப் புறக்கணியுங்கள். இவர்களைச் சினிமா உலகில் இருந்தே அப்புறப்படுத்துங்கள்.  இவர்களின் படங்களை தியேட்டர் உரிமையாளர்கள் வெளியிடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். பல வழிகள் உள்ளன. எது சிறந்த வழி என்பதை  நாம் தான் தேர்ந்தேடுக்க வேண்டும்.

அனைத்தும் தமிழர்கள் கையில் தான்! ஜாதி வேண்டாம்! அதனை ஒழிப்போம்!

No comments:

Post a Comment