Friday 2 June 2017

வயோதிகர்கள் வன்முறை..


தங்களது இளமைக் காலத்தில் பிள்ளைகளின் நலனுக்காக உழைத்து அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய பெற்றோர்கள் தங்களது கடைசிக் காலத்தில் அவர்கள் பிள்ளைகளாலேயே அடிக்கப்பட்டு, உதைக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு மிகவும் மனம் உடைந்த நிலையில் வீதிக்கு விரட்டப்படுகின்றனர்.

சமீபத்தில் வெளிச்சத்திற்கு  வந்தவர் பழம்பெரும் பாலிவூட் நடிகை கீதா கப்பூர். அவருக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு மகன், ஒரு மகள். மகனோடு தான் வசித்து வருகிறார். அவருடைய மகன் அவரை துன்புறுத்தியதோடு, சாப்பாடும் போடாமல் ஓர் அறையில் அடைத்தும் வைத்திருக்கிறார்.  சமீபத்தில் ஓரு மருத்துவமனையில் அவரைச் சேர்த்துவிட்டு அவர் நடையைக்கட்டி விட்டார்! அதே சமயத்தில் தனது வீட்டையும் காலி செய்து விட்டு தனது குடும்பத்தோடு தலைமறைவானார்! அதனால் மருத்துமனையினர்  அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது மகளும் தொடர்பில் இல்லை.  ஆனாலும் பாலிவூட்டைச் சேர்ந்த சில  நல்ல உள்ளங்கள் மருத்துவமனைச் செலவுகளை ஏற்றுக்கொண்டனர். இப்போது அவரை வசதியான ஆஸ்ரமம் ஒன்றில் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர் திரை உலகினர்.


பாலிவுட் மட்டும் அல்ல கோலிவுட்டிலும் இது போன்ற சம்பவங்களை நாம்  படித்திருக்கிறோம். ஒரு சில வ்ருடங்களுக்கு முன்னர் ஒரு நகைச்சுவை நடிகர் தனது மகன் தனக்குச் சாப்பாடு கொடுப்பதில்லை என்று கவல்துறையில் புகார் செய்த சம்பவத்தையும் நாம் படித்திருக்கிறோம். அவ்வளவு ஏன்? நம்மைச் சுற்றிக் கொஞ்சம் கவனத்தைத் திருப்பினாலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

பெற்றோர்களை இப்படிக் கொடுமைப்படுத்தும் பிள்ளைகள் யார்?  பெரும்பாலும் அவர்களது மகன்களும் மருமகள்களும் தான் இப்படிக் கொடுமைப் படுத்துபவர்களாக இருக்கிறார்கள். மகன்கள் விரும்பாமல் செய்கிறார்கள்; மருமகள்கள் விரும்பிச் செய்கிறார்கள்! ஆனாலும் இதற்கு ஒரு முடிவில்லை!  இதற்கான காரணங்கள் தான் என்ன?  பணம் இருந்தால் எல்லாச் சொந்தப் பந்தங்களும் வந்து சேரும். ஆனால் பணம் இல்லாவிட்டால் கடைசிக்காலத்தில் .....? பெற்றோர்கள் வீதியில் அல்லது ஏதாவது ஓர் ஆஸ்ரமத்தில்! இதில் மிகவும் கேவலம்: பெற்றோர்களின் பணத்தை வயதானக் காலத்தில் அவர்களிடமிருந்து பிடிங்கிக் கொண்டு அவர்கள் விரட்டியடிப்பது.

ஆனால் பெரும்பாலானக் குடும்பங்களில்  வயோதிகர்கள் வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் ஆளாவது மருமகள்களின் தூண்டுதலால் தான்!கணவர்களை எவிவிட்டு அவர்கள் நல்லபிள்ளைகளாக நடந்து கொள்ளுவது தான்! இதற்கு ஒரு முடிவில்லையா? இல்லை! இது ஒரு தொடர் கதை!  இன்றைய மருமகள் நாளைய வயதானத் தாய்! அப்போதும் அது தொடரும்! தொடர்ந்து கொண்டே இருக்கும்!

No comments:

Post a Comment