Saturday 27 January 2018

மருங்காபுரி மாயக்கொலை!


எனது பள்ளி நாட்களில் நான் படித்து இன்னும் மறக்காத ஒரு துப்பறியும் நாவல் என்றால் அது "மருங்காபுரி மாயக்கொலை" என்பதாகத்தான் இருக்கும்! எத்தனை எத்தனையோ மர்ம நாவல்கள், துப்பறியும் நாவல்கள் இன்னும் கணக்கிலடங்கா நாவல்களைப் படித்திருக்கிறேன். ஏனோ இந்த நாவலை மட்டும் என்னால் மறக்க முடியவில்லை!  எண்ணற்ற மர்ம, துப்பறியும் நாவல்களின் ஆசிரியர்களின் பெயர்கள் இன்னும் அப்படியே மனதில் நிற்கின்றது! 

இப்போது எனது ஞாபகத்தில்  உள்ள ஒரு சில பெயர்கள்: தமிழ்வாணன், மேதாவி, சிரஞ்சீவி, எஸ்.என்.கே.ராஜன், மாயாவி, பி.டி.சாமி - இப்படிச் சில பெயர்கள் இப்போது எனது ஞாபகத்தில் வருகிறது. இதில் அதிகமாக தமிழ்வாணன், சிரஞ்சீவி புத்தகங்களைப் படித்திருப்பேன் என நினைக்கிறேன். நானும் எனது நண்பர்களும் போட்டிப்போட்டுக் கொண்டு இவர்களின் புத்தகங்களைப் படித்திருக்கிறோம்!  சிங்கை, இந்தியன் மூவி நியுஸ் மாத இதழில் தமிழ்வாணன் எழுதிய "மலர்க்கொடி என்னை மறந்துவிடு!" என்னும் தொடர் கதை ஞாபகத்திற்கு வருகிறது. தமிழ் நேசன் நாளிதழில் சிரஞ்சீவி தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார்.  

ஆனால் இந்த  "மருங்காபுரி மாயக்கொலை!" என்னும் மர்ம நாவல் அதை எழுதிய வடூவூர் துரைசாமி ஐயங்கார் ஏனோ எனது மனதை வீட்டு நீங்கவில்லை!  நான் இந்த நாவலைப் படித்த அந்தக் காலக் கட்டத்தில் உண்மையாகவே அந்த நாவலை இரவு நேரத்தில் படிக்க என்னால் முடியவில்லை! நான் பயந்து போனேன் என்று மட்டும் எனக்கு ஞாபகம் இருக்கிறது! இப்போது அந்த நாவல் முழுமையாக எனக்கு ஞாபகம் இல்லை. ஏதோ ஒரு சில காட்சிகள் நினைவில் நிற்கிறது! ஆனால் இந்த நாவலின் பெயரும் அந்த நாவலை எழுதிய வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்னும் பெயர் மட்டும் அப்படியே நிற்கிறது! இவர் வேறு கதைகள் எழுதியிருக்கிறாரா, தெரியவில்லை. ஆனால் இந்தப் பெயர் எந்த வகையிலும் மர்ம நாவல்கள் எழுதுபவரின் பெயராகத் தெரியவில்லை! மிகவும் வித்தியாசமான பெயர். ஆனால் அந்தத் தலைப்பும் அந்த ஆசிரியரின் பெயரும் அப்படியே மனதில் நிலைத்து விட்டது! அதுவே ஆச்சரியம்!

வடுவுரார் வேறு நாவல்கள் எழுதியிருக்கிறாரா தெரியவில்லை. நான் படிக்க கிடைக்கவில்லை என்பதைத் தவிர அவர் நிறையவே துப்பறியும் நாவல்கள் எழுதியிருக்கிறார் என்பதாக அவரைப் பற்றிய குறிப்புக்கள் கூறுகின்றன.   நடிகர் எம்.என்.நம்பியார் கதாநாயகனாக நடித்த "திகம்பரசாமியார்" இவர் எழுதிய கதை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

"மருங்காபுரி மாயக்கொலை" என்னும் அந்தத் தலைப்பும் அதை எழுதிய வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்னும் வித்தியாசமான பெயரும் அப்படியே மனதில் நிலைத்து விட்டது! 

மீண்டும் அந்த நாவலைப் படிக்க ஆசை உண்டு. ஆனால் அதனைத் தமிழகத்திற்குப் போய்த் தேட வேண்டுமே!

No comments:

Post a Comment