Monday 29 January 2018

98 வயது பாட்டிக்கு பதமஸ்ரீ விருது!


இந்த 2018 - ம்  ஆண்டு இந்திய குடியரசு தினத்தன்று இந்திய அரசாங்கம் 98 வயது பாட்டிக்கு  பத்மஸ்ரீ விருது  கொடுத்த கௌரவித்திருக்கிறது!

தமிழ் நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த பாட்டி ஞானம்மாள் என்பவர் தான் அவர். 




பாட்டியின் சாதனை என்ன?  தனது 8-வது வயதில் தனது தந்தையிடமிருந்து யோகா கலையைக் கற்க ஆரம்பித்தார். பாட்டிக்கு யோகக் கலையில் 90 ஆண்டு கால அனுபவம் உண்டு. இவரிடம் கடந்த 45 ஆண்டுகளாக சுமார் பத்து இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் யோகாசனத்தைக் கற்றிருக்கிறார்கள்! ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை சுமார் 100 பேர் ஒவ்வொரு நாளும் யோகாவை இவரிடம் கற்றுக் கொண்டு வருகின்றனர்!

பாட்டிக்கு 2 மகன்களும், 3 மகள்களும், 11 பேரன் பேத்திகளும் உள்ளனர்.

இவரிடம் யோகாசனத்தைக் கற்றுக் கொண்டவர்களில் சுமார் 600 பேர் உலக அளவில் யோகாசன ஆசிரியர்களாக உள்ளனர். இவருடைய மாணவர்கள் பலர் உலக அளவில் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கங்களையும்    வென்றிருக்கின்றனர். 

பாட்டி யோகாசனம் செய்கின்ற நாளிலிருந்து இது  வரை  உடல் நலம் இல்லை என்று முடங்கியது கிடையாது! மருத்துவமனையே அவரைக் கண்டு அஞ்சியது  எனலாம்! அந்த அளவுக்கு வலுவான உடலையும்  மனதையும் யோகாவால் பெற்றிருக்கிறார்  பாட்டி!

யோகாசானம்  மூலம்  பல  விருதுகளைப்  பெற்றிருக்கிறார் இந்த  ஞானம்மாள்  பாட்டி!  இதற்கு முன்னர் குடியரசு  தலைவரிடம்  பெண்  சக்தி  விருதையும்   பெற்றிருக்கிறார். இப்போது  பதமஸ்ரீ  விருதையும்  பெற்றிருக்கிறார்  பாட்டி. இன்னும் இதை விட பெரிய விருதைகளையும்  பெற  வேண்டுமென  இறைவனைப்  பிரார்த்திப்போம். 

No comments:

Post a Comment