Thursday 11 January 2018
டுரியான் எடையில் தில்லுமுல்லு!
நாட்டில் எல்லாப் பொருட்களிலும் தில்லுமுல்லுகள் நிறைந்து விட்டன! போன மாதம் குழைந்தைகள் குடிக்கும் பால் பவுடரில் கலப்படம் என்பதாகச் செய்திகள் வெளி வந்தன! அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது தெரியவில்லை. 'இதற்கு நான் பொறுப்பள்ள, அவர்கள் தான் பொறுப்பு' என்பதாக ஒருவரை ஒருவர் சுட்டிக்காட்டி குறைகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்!
இதோ இப்போது டுரியான் விற்பனையில் ஒரு தில்லுமுல்லு நடந்து கொண்டிருக்கிறது! நிறுவை இயந்திரங்களில் எடைகளைக் கூட்டுவதற்காக வியாபாரிகள் இயந்திரங்களில் சில குளறுபடிகளை ஏற்படுத்தி எடைகளைக் கூட்டி விடுகின்றனர்! பத்து கிலோ டுரியான் பழம் வாங்கினால் உண்மையில் நாம் ஐந்து கிலோ பழம் தான் வாங்குகிறோம்! குறைவான விலையில் விற்பது போல ஒரு பாவலா காட்டி எடையைக் குறைத்து விற்பனையைக் கூட்டும் வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர் இந்த வியாபாரிகள்!
தீடீரென உள்நாட்டு வாணிப அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கையில் இந்த வியாபாரிகளின் தில்லுமுல்லுகளைக் கண்டுபிடித்தனர், சிரம்பான், மந்தின், ஜலான் பந்தாய்-ஜெலுபு, கோல கிலவாங், செனவாங் ஆகிய பகுதிகளுள்ள சுமார் 46 டுரியான் விற்பகங்களைச் சோதனை செய்ததில் இந்த தில்லுமுல்லுகள் வெளி வந்தன! பத்தொன்பது விற்பகங்கள் குறைவான எடையுடன் டுரியான்கள் விற்பனை செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடமிருந்து ரி.ம.5,200.00 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. எனினும் அவர்களிடமிருந்து பழங்கள் எதனையும் பறிமுதல் செய்யப்படவில்லை!
இந்தச் சோதனைகள் டுரியான் பழ பருவகாலம் வரைத் தொடரும் என வாணிப அமைச்சு அறிவித்துள்ளது.
எப்பாடுப் பட்டாவது இந்தத் தில்லுமுல்லுகள் துடைத்தொழிக்கப்பட வேண்டும் என்பதே நமது அவா!
வாணிப அமைச்சின் இந்த நடவடிக்கையை வரவேற்போம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment