Sunday 14 January 2018

குளிர்! குளிர்! குளிர்!


குளிர்! குளிர்! குளிர்! அடாடா!  என்னமாய் குளிர்கிறது!

இது என்ன புதுமை! எப்போதுமே, எல்லாக் காலங்களிலுமே, மின் விசிரி, குளிரூட்டி என்று பழக்கப்பட்டுப் போன உடம்பு! இப்போது எதனையுமே பயன்படுத்த முடியவில்லை! தொடர்ச்சியான மழை. வேகமாக இல்லையென்றாலும் சிறு சிறு துளியாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உஷ்ணத்தைப் பார்க்க முடியவில்லை. அனுபவிக்க முடியவில்லை.

இப்படி ஒரு குளிரை தமிழ் நாட்டில் ஊட்டியில் அனுபவத்திருக்கிறேன். நமது நாட்டில் கேமரன் மலையில் அந்த அனுபவம் உண்டு. ஆனால் நான் வசிக்கும் பகுதியில் இப்படி ஒரு குளிரை நான் அனுபவித்ததில்லை. எல்லாக் காலங்களிலும் ஓரு வெப்பமான சூழ்நிலையில் வாழந்தவன். வெப்பத்திற்குத்தான் எமது உடம்பு பழக்கப்பட்டிருக்கிறது! தீடீரென பருவ மாற்றத்தால் இப்படி அதிரடியாக ஓரிரு நாட்களில் அனைத்தும் மாறிவிட்டன! எந்நேரமும் குளிரைத் தாங்க வேண்டிய உடைகளை அணிய வேண்டி வந்துவிட்டது!

நான் பள்ளியில் படித்த காலத்தில் பூகோளத்தில் படித்தது இன்னும் நினவில் உள்ளது. நெகிரி செம்பிலான்,கோலப்பிலா என்னும் ஊர் தான் மிகவும் உஷ்ணத்திற்குப் பேர் போன இடம் என்று.  இப்போது அங்கும் கூட குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதாக நண்பர்கள் சொல்லுகின்றனர்! 

ஆக நாம் வாழுகின்ற தீபகற்ப மலேசியாவில் இப்போது குளிர்,குளிர், குளிர் நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது!  ஆனால் நாம் அதற்குத் தயாராகவில்லை என்பது தான் இப்போது நமக்குப் புரிகிற விஷயம். எப்போதும் இந்தப் பருவ மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தால் நாம் எச்சரிக்கையாய் இருப்போம்.  நாம் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை! இன்னும் குளிர் தணிந்தபாடில்லை! தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. குறைந்த பட்சம் இன்னும் ஓரிரு வாரங்களுக்காவது நாம் இந்தக் குளிரோடு தான் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது!

இனி ஒரு நாளைக்கு மூன்று வேளை குளியல், இரண்டு வேளை குளியல் எல்லாம் தேவைப் படாது!  எனக்குத் தேவைப்படவில்லை!

உங்களுக்கு...?


No comments:

Post a Comment