Monday 19 December 2016

112 வயதிலும் ஊதித் தள்ளுகிறார் பாட்டி!




பாட்டியம்மாவுக்கு 112 வயது. அதற்கு மேலும் அவருக்கு ஓரிரு வயது கூடவே  இருக்கும் என்கிறார்கள் அவர் ஊர்க்காரர்கள்.

நுவாகோட், நேப்பாளிலுள்ள ஊரைச் சேர்ந்தவர் பத்துளி லாமிச்சான். அது தான் அவர் பெயர்.

சுமார் 95 வருடங்களாக விடாமல் சிகிரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர் பாட்டி. ஒரு நாளைக்கு சுமார் 30 சிகிரெட்டுக்களை ஊதித் தள்ளுகிறார்!  17 வயதில் ஆரம்பித்த பழக்கம்.  யார் பேச்சையும் கேட்பதாக இல்லை!

இளம் வயதில் இந்தியாவிற்குவேலைத் தேடிப் போன அவரது கணவர் இதுவரை வீடு திரும்பல!

பாட்டி எல்லாக் காலத்திலும் சுறுசுறுப்புக்குப் பேர் போனவர். வயதானவர்கள்  சும்மா இருக்கக் கூடாது என்கிறார். எப்போதும் வேலை செய்து கொண்டே இருங்கள். அது தான் உங்களை உயிரோடு வைத்திருக்கும் என்கிறார். சோம்பித் திரிவதும், சொம்பேறித்தனமும் வயதானவர்களைக் கொல்லும். அது தான் வயதானவர்களுக்கு அவரது அறிவுரை.

மன அழுத்தம் என்பது தான் இப்போது உள்ள மிகப் பெரிய பிரச்சனை. அதிலிருந்து விடுபடுங்கள். மகிழ்ச்சியாயிருங்கள். நீங்கள் நீண்ட நாள் வாழ்வீர்கள்.

ஆமாம், அவரின் புகைப்பழக்கத்தை பற்றீ...?  மற்றவர்கள் தயாரிக்கும் சிகிரெட்டுக்களை அவர் பயன் படுத்துவதில்லை.  எல்லாமே அவரது சொந்தத் தயாரிப்புக்கள் தான்!அது தான் அவரை மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது என்கிறார்!

ஒரு இந்துக் கோயிலின் உதவியோடு தனது காலத்தை மகிழ்ச்சியோடு கழித்து வருகிறார் பத்துளி.

வேலை! வேலை! வேலை! அது தான் நீண்ட ஆயுளைக் கொடுக்கும்!

அது தான் பாட்டியின் அறிவுரை!






No comments:

Post a Comment