Thursday 15 December 2016

கேள்வி - பதில் (37)


கேள்வி

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் நீடிக்கிறதே?

பதில்

ஆமாம்! எல்லாப் பக்கங்களிலிருந்தும் நாம் கேள்விப்படாத, ஆச்சயரியமான, பல செய்திகள் வெளியாகின்றன. எதை நம்புவது என்று ஒன்றும் புரியவில்லை!

ஆனால் அனைத்துச் செய்திகளும் சசிகலாவையே சுட்டிக் காட்டுகின்றன. அனைத்தையும் நம்ப முடியவில்லை என்றாலும் ஒரு சில விஷயங்கள் நம்மை விழி பிதுங்க வைக்கின்றன!

போகிற போக்கைப் பார்த்தால் சசிகலாவைப் புரட்டி எடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது!  அவரோ இதுவரை வாய்த் திறக்கவில்லை! திறக்கவும் மாட்டார்  என்றே தோன்றுகிறது!

அ.தி.மு.க. மேல் மட்டத்தில் எல்லாருமே கப்சிப்! பணத்தைக் கொடுத்து அவர்களைக் 'கப்சிப்' ஆக்கிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது!

ஒன்று மட்டும் புரிகிறது. இந்திய பிரதமர் மோடிக்கும் இது பற்றி தெரிந்திருக்க வேண்டும். இப்போது சசிகலாவின் குடுமி பிரதமர் மோடியின் கையில். அல்லது பன்னிர்செல்வத்தின் குடுமியையும் சேர்த்துக் கொள்ளலாம். இவர் இருவரில் யாரோ ஒருவர்! ஆனால் சசிகலாவின் பக்கம் தான்  'வர்தா' வீசுகிறது!

சசிகலாவின் அமைதியே அவரை குற்றவாளியாகச் சுட்டிக் காட்டுகிறது! அது மட்டும் அல்லாமல் ஏதோ எதுவுமே நடவாதவர் போல் நடந்து கொள்ளுவதும், ஜெயலலிதாவைப் போல் தமிழகத்திற்கு வரும் பிரமுகர்களை வரவேற்பதும் - எல்லாவற்றிலும் ஒரு அவசரத்தைக் காட்டுவதும் - அவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் ஐயப்பாட்டைத்தான் உருவாக்குகின்றன! அவர் இயல்பாக நடந்து கொள்ளவில்லை என்பது மட்டும் புரிகிறது!

இதுவரை பன்னிர்செல்வமோ, சசிகலாவோ பேசவோ, கொள்ளவோ, பொது மக்களுடனான தொடர்பை ஏற்படுத்தவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இது வெறும் அ.தி.மு.க. என்னும் கட்சியின் பிரச்சனை மட்டும் அல்ல. தமிழ் நாட்டு முதலைமைச்சரின் மரணம் என்பது தமிழ் நாட்டுப் பிரச்சனை. இப்போது இவர்கள் இருவருமே ஏதோ - இந்தப் பிரச்சனை - கட்சி பிரச்சனையாக நினைத்துக்  கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

இந்த மரணம் என்பது தமிழகப் பிரச்சனை. தமிழக மக்கள் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். முதலமைச்சர் மரணத்தில் இன்று இந்த மர்மம் நீடித்தால் நாளையும் இது போன்ற மர்மங்கள் தொடர வாய்ப்புண்டு. அவரின் அண்ணன் மகளையும் காணோம் என்னும் வதந்தியும் இப்போது நிலவுகிறது!

இதற்கு ஒரு முடிவு காண்பது பிரதமர் மோடியின் கையில்! வேறு வழி இல்லை!


No comments:

Post a Comment