Wednesday 14 December 2016

சிறார் மதமாற்றம் - தடம் மாறுகிறதா பெர்லிஸ்?


மத்தியில் தேசிய முன்னணி அரசாங்கம். பெர்லிஸ் மாநிலத்திலும் தேசிய முன்னணி அரசாங்கம். ஆனால் போகிற போக்கோ  வெவ்வேறு பாதைகளில். பெர்லிஸ் மாநிலம் திடீரென மத்திய அரசாங்கத்திற்கு எதிர்ப்பான ஒரு கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டிய காரணம் என்ன?

எதிர்ப்பு என்று சொல்லலாமா அல்லது இரு தரப்பும் சேர்ந்து நமக்குக்  காது குத்துகிறார்களா?  பெர்லிஸ் மாநிலம் இப்படி ஒரு  சட்டத்தை அவசர அவசரமாகக் கொண்டு வருவதற்கான அவசியம் என்ன? மத்திய அரசாங்கத்திற்குத் தெரியாமல் - அவர்களுடைய ஆசியில்லாமல் - பெர்லிஸ் மாநிலம் இப்படி செய்யுமா? அதை நாம் நம்ப வேண்டுமா? இதனை நாம் ஏதோ ஒரு நாடகம் அரங்கேறுகிறது என்று தானே நினைக்க வேண்டியிருக்கிறது! நாடகம் என்ன, நாடகமே தான்!

அதுவும் நாடாளுமன்றத்தில் இந்த மதமாற்றத்திற்கு  முடிவு காண கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த அரசாங்கம் முன்வந்திருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு  அவசர மதமாற்ற சட்டத்தை மாநில அர்சாங்கம் கொண்டு வருவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.  மாநில அரசாங்கமும், மத்திய அரசாங்கமும் சேர்ந்து மக்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகவே இது தோன்றுகிறது! இதற்கு ஒரு முடிவு காணுப்படும் என்று நமக்குத் தோன்றுவில்லை!

ஏற்கனவே சிறுவர்கள் மதமாற்றம் சம்பந்தப்பட்ட வழக்குகள் பல எந்த ஒரு முடிவுமில்லாமல் இழுபறியில் நிற்கின்றன.இழுபறி  என்றாலும் அது இஸ்லாத்துக்குச் சாதகமாகத்தான் இருக்கின்றது.

இந்த நேரத்தில் பெர்லிஸ் மாநிலம் ஒரு தலைப்பட்சமாக  சிறார் மதமாற்றத்தை அனுமதிக்கும் விதமாக சட்டத்தைக் கொண்டு வந்திருப்பது மிகவும் கண்டித்தக்கது. நாம் கண்டிப்பதை அல்லது நமது தலைவர்கள் கண்டிப்பதை - யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளுவதில்லை!  அது தான் இங்குள்ள பிரச்சனை.

இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறிய பத்மநாதன் குழந்தையோடு தலைமறைவாய் இருப்பதை இதுவரை காவல்துறை கண்டுபிடிக்க முடியவில்லை! நீதிமன்றம் ஆணையிட்டும் குழந்தையை அதன் தாய் இந்திரா காந்தியிடம்  ஒப்படைக்க காவல்துறையினரால் இயலவில்லை!      

                                                   

முகமது ரிதுவான் அப்துல்லா என்னும் பதமநாதன்  நாட்டில் தான் வாழ்கிறார். ஆனால் அவருக்கு முகவரி இல்லை. கைதொலைப் பேசி இல்லை. தொடர்புக்கான எந்த வழியும் இல்லை. ஆனால் அவர் நாட்டில் தான் வாழ்கிறார்! நீதிமன்ற வழக்குகளிலும் அவர் முகவரி குறிப்பிடப்படவில்லை! அவர் கடைசி மகள் இப்போது பள்ளி போகிறாள். ஆனாலும் அவருடைய முகவரியை யாராலும் கண்டுப்பிடிக்க முடியவில்லை!

அதனால் என்ன சட்டதிருத்தம் கொண்டு வந்தாலும் அதனை - நீதி, நியாயம் பற்றி கவலைப்படாத ஒரு நாட்டில் - எந்தச் சட்ட திருத்தத்தினால் எந்தப் பயனும் இல்லை!

இப்போதைக்கு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டதிருத்தம் ஒரு தேர்தல் அறிவிப்பாகவே எடுத்துக் கொள்ளலாம்! மற்றபடி இந்தச் சட்டதிருத்தத்தினால் பெரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது!

மாநிலமும் நடுவண் அரசாங்கமும் சேர்ந்து நமக்குக் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுகிறார்கள்!

மனமாற்றம் ஏற்பட்டால் தான் சிறார் மதமாற்றம் பயன் உடையதாக அமையும்! அதை நோக்கி பயணிப்போம்!


No comments:

Post a Comment