Saturday 17 December 2016

கேள்வி-பதில் (38)

கேள்வி

சின்னம்மா சசிகலா செய்வது சரியா?


பதில்

எப்படிப் பார்த்தாலும் சின்னம்மா செய்வது சரியில்லை!

எந்த அரசியல் பின்னணியுமில்லை. பெரியம்மா இருந்தவரை வாலைச் சுருட்டிகொண்டு இருந்தவர் இப்போது தேர்ந்த அரசியல்வாதி போல செயல்பட ஆரம்பித்துவிட்டார்!

நமக்கும் வருத்தமாகத் தான் இருக்கிறது. தமிழ் நாட்டை  யார் வேண்டுமானாலும்  ஆட்சி செய்யலாம் என்கின்ற ஒரு நிலைமை தமிழ் நாட்டில் உருவாகிவிட்டதாகவே தோன்றுகிறது!

சசிகலாவுக்கு அரசியல் செல்வாக்கு இல்லை என்பது அவருக்கே தெரியும். மக்கள் யாரும் அவரை ஆதரிக்கப் போவதில்லை. ஆனாலும் இன்னும் தேர்தல் வர நான்கரை ஆண்டுகள் இருக்கும் இந்த இடைக்காலத்தில் ஒரு முதலமைச்சராக இருந்தால் எவ்வளவு  சம்பாதிக்கலாம் என்பதில் குறியாக இருக்கிறார்.



ஜெயலலிதாவுடன் 30 ஆண்டு கால நெருக்கமாக இருந்தவர். அவருடைய ஒவ்வொரு அடியும் எதை நோக்கிப் போகிறது என்பதை அறிந்தவர்.  தேர்தல் முடிந்து அடுத்த ஐந்து ஆண்டுகள் அவருடைய செயல் திட்டங்கள் எப்படி இருக்கும் என்பதை நன்கு புரிந்தவர். "செயல் திட்டங்கள்" என்றால்? எத்தனை பாலங்கள், எத்தனை ஏரிகள், எத்தனை குளங்கள், குட்டைகள், எத்தனை அலுவலகங்கள் - இப்படி இரு அம்மாக்களும் சேர்ந்து பேசி, விவாதித்து தமிழ் நாட்டின் 'வளர்ச்சிக்காக' ஒரு முடிவுக்கு வந்திருப்பார்கள்!

இப்போது பெரிய அம்மா இல்லை. சின்னம்மாவுக்கு அந்தப் பணம் பண்ணும் அற்புத விளக்குப் பற்றிய இரகசியம் என்பது அவருக்கு மட்டுமே உரியது! அவரால் அதனை மற்றவர்கள் வசதிக்காக விட்டுக்கொடுக்க முடியாது! அப்படியெல்லாம் விட்டுக் கொடுக்க மாட்டார்!

முடிந்தவரை இழுபறியிலேயே ஆட்சி நடக்கும்! இவரை அடக்குவதற்கு மோடியைத் தவிர வேறு யாராலும் முடியாது. இவரின் ஊழல் வழக்கை வைத்தே மோடியால் இவரை மிரட்டி உட்கார வைக்க முடியும்!

பார்ப்போம்! தமிழனின் தலையெழுத்தை!

No comments:

Post a Comment