Saturday 3 December 2016

பெட்ரோல் விலை குறைந்தது! ஆனால்......!


பெட்ரோல் விலை குறைந்தது என்பது மகிழ்ச்சிக்குறிய செய்தி தான். ஆனாலும் மலேசியர்கள் மகிழ்ச்சியடைய முடியவில்லை!

காரணம் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் தான் பெட்ரோல் விலை பதினைந்து (15)காசுகள் கூட்டப்பட்டன. அது ஒரு அதிர்ச்சி தரும் செய்தி என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் இப்போது குறைக்கப்பட்டதோ ஐந்தே ஐந்து (5)காசுகள் தான்!

ஏமாற்றம் தான் என்றாலும் ஏதோ அந்த அளவாவது குறைக்கப்பட்டதே என்பதில் மகிழ்ச்சியே!

ஆனால் இங்கு யோசிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. விலை ஏற்றத்தின் போது எல்லாப் பொருள்களின் விலையும் ஏறிவிட்டன. அவ்வளவு தான்!  இனி மேல் பொருள்களின் விலை இறங்கும் என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை!

வியாபாரிகள் விலைகளை ஏற்றிவிட்டார்கள் என்பது வழக்கமான பல்லவி தான். ஆனால் இதற்கு அரசாங்கமும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறதோ என்று நாம் நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை.

பதினைந்து காசுகள் ஏற்றிவிட்டு ஐந்து காசுகள் குறைக்கும் போது விலைவாசிகளில் எந்தத் தாக்கமும் ஏற்படப்போவதில்லை. சாதாரணக் காலங்களிலேயே ஏறிய பொருள்களின் விலை குறைக்கப்படுவதில்லை.

முன்பு பதினைந்து காசுகள் ஏற்றத்தின் போது பொருள்களின் விலை மட்டும் ஏறவில்லை.  பல பொருள்கள் அப்போதிருந்தே காண முடியவில்லை!

மக்கள் பயன்படுத்தும் மிக அத்தியாவசியமான பொருள்களான சமையல் எண்ணைய், குழந்தைகளின் பால் பவுடர்கள் பெரும்பாலும் கடைகளில் காணப்படவில்லை!  ஒரு சிலர் பேராங்காடிகளில் ஒரு சிலப் பொருள்கள் கிடைப்பதாகச் சொல்லுகிறார்கள். அப்படி என்றால் சிறு வியாபாரிகளின் நிலை என்ன?

மக்கள் மனதிலே வேறு ஒர் எண்ணமும் வலூவூன்றுகிறது. ஏன்? இப்போதே அனைவரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்! ஐந்து காசுகள் குறைக்கபட்டதற்கு மகிழ்ச்சியடைவதைவிட  வெகு சீக்கிரத்தில் அதாவது ஜனவரியில் இருபது (20) காசுகள் கூட்டுவது உறுதி என்பதாக இப்போதே மக்கள் கவலைப்பட  ஆரம்பித்துவிட்டார்கள்!

ஏற்றமோ, இறக்கமோ எல்லாம் நன்மைக்காக என்றே எடுத்துக் கொள்ளுவோம்!

No comments:

Post a Comment