Friday 30 December 2016

கேள்வி - பதில் (40)


கேள்வி

சசிகலா முதல்வர் ஆவாரா...?

பதில்

பொதுவாக அ.தி.மு.க. வின் பொதுச் செயலாளர் தான் தமிழக முதல்வர் ஆகலாம்.  அது தான் கட்சியின் பாரம்பரியம்.

இந்த பாரம்பரியம் தொடரலாம் அல்லது தொடராமலும்  போகலாம்.. அரசியலில் எதுவும் நடக்கலாம். ஆனால் இப்போதைக்கு இது தொடரும் என நிச்சயம் நம்ப வேண்டும். காரணம் இப்போது சசிகலா தான் பொதுச் செயலாளர்.

ஆனாலும் பெரும்பாலானோர் பன்னிர்செல்வம் தான் முதல்வர் ஆவார் என்று நினைத்தனர். ஆனால் அது நடக்கவில்லை!

ஆனால் இதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படத் தேவை இல்லை! இந்த இருவரில் யார் வந்தாலும் தமிழ் நாட்டுக்கு ஆகப்போவது எதுவும் இல்லை!

இவர்கள் நினைப்பதெல்லாம் அடுத்த தேர்தல் வரை யார் முதல்வர் என்பது தான். அது தான் இப்போதைய போட்டி. அடுத்த தேர்தலக்குப் பிறகு எதுவும் நடக்கலாம். ஆட்சி பறி போகலாம். இவர்கள் இருவருக்குமே அ,தி,மு.க. தொண்டர்களிடம் எந்த மதிப்பும் மரியாதையும் இல்லை. இன்னும் நான்கரை ஆண்டுகளில் கட்சியை இவர்கள் வளர்ப்பார்கள் - இவர்களால் வளர்க்க முடியும் - என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. வெறும் சினிமா நடிகர்களை வைத்தெல்லாம் கட்சியை வளர்த்து விட முடியாது!

இப்போது - இந்த நிமிடம் - கையில் இருப்பது அடுத்த நாலரை ஆண்டுகள். அதனை நோக்கித்தான் சசிகலா காய்களை நகர்த்துவார்! அவர் நகர்த்துகிறாரோ இல்லையோ அவருடைய மன்னார்குடி மன்னர்கள் அவரை நகர்த்த வைப்பார்கள்!

இவர் காலத்தில் தமிழ் நாடு 'ஆகா! ஒகோ!' என்று வளர்ந்து விடும் என்பதையெல்லாம்  நாம் மறந்து விட வேண்டும்.

ஆட்சியில் இல்லாத போதே இசையமைப்பாளர் கங்கை அமரனின் சொத்துக்களை அபகரித்தவர் சசிகலா! ஆக, அடுத்த நாலரை ஆண்டுகள் எதனை நோக்கிப் போகும் என்பதை இதனை வைத்தே ஒரளவு ஊகித்துக் கொள்ளலாம்!

இருப்பினும் எதனையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. நல்லதும்  நடக்கலாம். தீடீரென அவர் திருந்தலாம். நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டுமென்று நினைக்கலாம்!

இப்படி எத்தனையோ ...லாம்...லாம்....லாம்....! ஆம்! சசிகலா தான் முதல்வர்! நடக்கட்டும் நல்லாட்சி!

No comments:

Post a Comment