Wednesday 15 May 2024

குழந்தைகளுக்கு காது எப்படி?

 


குழந்தைகள் செவித்திறன் எப்படி இருக்கிறது  என்பதைக்  குழந்தைகள்  பிறந்தவுடனேயே  கவனிக்க வேண்டியது பெற்றோர்களின்  பொறுப்பு.  காரணம்  இப்போதெல்லான் பெற்றோர் டிக்டோக், யூடியூப், விடியோ  போன்றவைகளில் அதிகக்  கவனம் செலுத்துவதால்  குழந்தைகளின் நலனை மறந்துவிடுகின்றனர்.

ஆனாலும் அரசாங்க மருத்துவமனைகளில்  செவித்திறன் பரிசோதனைகள் நடப்பது  நமக்கு ஆறுதலான செய்தி.  அவர்களை மட்டுமே நம்பியிராமல் நாமும் அதில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.  ஏனென்றால் இப்போதெல்லாம் செவித்திறன் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.  

சென்ற ஆண்டு பரிசோதிக்கப்பட்ட  குழைந்தைகளில் சுமார்  987 குழைந்தைகளுக்குச்    செவித்திறன் குறைபாடுகள் இருந்ததாக  சுகாதார அமைச்சர்  குறிப்பிட்டிருக்கிறார். இதனை நாம் ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள  வேண்டும்.  இந்த எண்ணிக்கை குறைந்தால் ஏற்றுக் கொள்ளலாம்.  ஆனால் வாய்ப்புண்டா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.  கூடுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.  காரணம் நமது சுற்றுச்சூழல் அப்படி.

காது கேட்காத குழந்தைகளின் நிலையை எண்ணிப் பாருங்கள்.  நமது வீடுகளில் உள்ளவர்களே  அதற்கு எதிரியாக இருப்பார்கள்.   பெற்றோர்களின் அசட்டையினால்  குழந்தைகளின் எதிர்காலம் எப்படியெல்லாம் பாதிக்கப்படும் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.  கல்வி கற்க அவர்கள் படும்பாட்டையும் யோசியுங்கள்.  ஊனம் உற்ற பிள்ளைகளாக அவர்களை மாற்றிவிடாதீர்கள்.  

கர்ப்பம் உள்ள பெண்கள் கைப்பேசி, டிக்டோக், விடியோ - போன்றவைகளை அதிகம் பயன்படுத்துவதை தவிருங்கள்.  அதிகமான சத்தங்கள் அங்கிருந்து தான் வருகின்றன. நம்மைச் சுற்றிலும் இன்னும் அதிகமாக வருகின்றன.  இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?  இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.   ஆனாலும் எல்லாமே ஓர் எச்சரிக்கைதான்!

இந்த செய்தி   இளம் பெற்றோர்களுக்கு  ஓர் எச்சரிக்கை.   மற்றபடி நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.  உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் உங்கள் கையில்.  செவுடு, செவிடா, செவிடி - என்று தங்கள் குழந்தைகள் அழைக்கப்படுவதை எந்தப் பெற்றோரும் விரும்பவதில்லை.

நீங்களும் அப்படித்தான்

No comments:

Post a Comment