Tuesday 14 May 2024

பேராசிரியர் செய்தது சரிதான்!


பெராசிரியர் இராமசாமியைப் பற்றி அவதூறு பேசுவதை நாம் நிறுத்த வேண்டும். 

தமிழ் சமூகத்திற்காக பல ஆண்டுகள் போராடியவர் இன்னும் அவர் போராடி வருபவர்.  ஆனால் நமது துரதிருஷ்டம்.  ஜனநாயக செயல் கட்சி இப்போது தமிழர்களைக் களையெடுக்கும் காலம்   அவரும் களையெடுக்கப்பட்டார். அதனால் அவரது சேவை பாதியிலேயே நின்று போனது.  குறைந்தபட்சம் பினாங்கு இந்தியர்களாவது பயன்பெற்றிருப்பர்.  அதுவும் இல்லாமல் போனது வருத்தம் தான்.

கோலகுபுபாரு இடைத்தேர்தலில் அவர் ஜ.செ.க. விற்கு  வாக்களிக்க வேண்டாம் என்று சொன்னார்.  அது தவறில்லை தான்.  சீனர்களின் நலனுக்காக மட்டும் யோசிப்பவர்கள் அவர்கள்.  கோலகுபுபாருவின்  மூன்று தோட்டங்களின்  வீடமைப்புத் திட்டத்திற்கு லிம் குவான் எங் நிதியமைச்சராக இருந்தபோது  "பணம் இல்லை" என்று கைவிரித்துவிட்டதாக  குற்றச்சாட்டு எழுந்தது.  இது ஒன்றே போதும். அக்கட்சி இந்தியர்களை  ஓரங்கட்டுகிறது என்பதற்கு ஓர் உதாரணம்.

ஆனால் என்ன செய்வது?  அங்கு பி.கே.ஆர். போட்டியிட்டதனால்  அவர்கள் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது!

இப்படியெல்லாம் அவர் சொன்னாரே என்கிற  கோபம் தேவையில்லை. ஒன்றைக் கவனியுங்கள்.  அவர் அப்படி சொல்லாவிட்டால் அந்த வீடமைப்புத் திட்டத்தின் நிலை என்னவாக இருக்கும்?  அவர் அப்படி பேசியதால்  தானே ஆளுங்கட்சியினர்  வரிந்து கட்டிக்கொண்டு கீழே இறங்கி  வேலை செய்தனர்!  இல்லாவிட்டால்   அங்கேயும் ஒரு ஏமாற்று வேலை  தான் நடந்திருக்கும்!

மற்ற அரசியல்வாதிகளைப் போல அவர் எதனையும் மூடி மறைக்கவில்லை.  நேரடியாக ஜ.செ.க.விற்கு  வாக்களிக்க வேண்டாம்  என்பதை அவர் தான் ஆரம்பித்து வைத்தார்.  அதன் பின்னர் தான் பிரச்சாரங்கள் சூடு பிடித்தன!  பேராசிரியரின் வார்த்தைக்கும் ஒரு மரியாதை உண்டு  என்பதைத் தெரிந்து கொண்ட பின்னர் தான்  அனைத்து அரசியல்வாதிகளும்  களத்தில் குதித்தனர் என்பதை மறக்க வேண்டாம்.

அதனால் தேவையற்ற சர்ச்சைகளைக் கிளப்பாதீர்கள். அவர் எதைச் செய்தாலும் நமது நலனுக்காகத்தான் செய்வார் என்று நம்புங்கள்.  அரசியல் அதிகாரம் இல்லையென்றால்  நாம் எதிர்பார்ப்பது போல  அவரால் செய்ய இய்லாது. 

அவர் ஒரு போராளி என்பதை மட்டும்  மறந்து விடாதீர்கள்!

No comments:

Post a Comment