Saturday 18 May 2024

வெளிநாட்டவருடன் திருமணமா?

 

வெளிநாட்டு ஆண்களின் மேல் ஒரு கண் வைத்திருக்கிறீர்களா? அதாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் இருக்கின்றதா? 

வெளிநாட்டு ஆடவர் என்று சொல்லும் போது  வங்காளதேசம், இந்தியா, நேப்பாளம், ஸ்ரீலங்கா போன்ற  நாடுகளைச் சேர்ந்தவர்களைத்தான்  பெரும்பாலும் நாம் குறிப்பிடுகிறோம்.  படித்தவரிடையே நடைபெறும் திருமணங்களை நாம் சொல்லவில்லை. 

இவர்கள் பிழைக்க வந்தவர்கள் என்று சொல்லுவதைவிட  'குடிக்க' வந்தவர்கள்  என்று சொல்லலாம்!  இன்றைய நிலையில் அவர்கள் தான் பெரிய குடிகாரர்கள்!  அவர்கள் ஊர்களில் இதையெல்லாம் செய்யத் தயங்கும் அவர்கள்  இங்குத் தாராளமாகக் குடிக்கின்றனர்.  பிள்ளைக்குட்டிகாரர்களை நாம் சொல்லவில்லை என்பதை அறிக!  எல்லாரையும் பொதுவாகவும் சொல்லவில்லை.  பொறுப்பானவர்கள் பலர் இருக்கத்தான் செய்கின்றனர்.

திருமணம் புரியக் கூட நிலையில் இருந்தால்  பரவாயில்லை.  ஆனால் அவர்கள் ஊர் பக்கம் போய் விடாதீர்கள்.  போனால் உங்கள் நிலைமையே மாறிவிடும்.  அவன் உங்களை ஏமாற்றுவான்.   அவர்கள் ஊரில உங்களால் எதுவும் செய்ய முடியாது.  அங்குள்ளவர்கள் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!

இப்படிப்பட்ட சூழ்நிலையில் 'கணவனை' நம்பி  அவர்கள் ஊருக்குப் போனவர்கள் பலர்,  ஒன்று: சிறையில் இருக்க வேண்டும் அல்லது அடி உதையோடு வாழவேண்டும்.  இங்கு இருக்கும்வரை நீங்கள் தான் ராணி! அங்குப் போய்விட்டால்  அவன் தான் ராஜா!   உங்களிடம் உள்ள பணத்தை ஏப்பம் விட்டுவிட்டு  உங்களையும் நடுவீதிக்குக் கொண்டு வந்துவிடுவார்கள்!  எதற்கும் அஞ்சாதவர்கள்!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.  அவர்களில் பெரும்பாலோர்  ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பணம் இருக்கும்வரை எந்தப் பிரச்சனையும் இல்லை.  பணம் காலியாகிவிட்டால்....?  அங்கு அவர்களுடன் உங்களால் பேர் போட முடியாது.  இப்படி நம்பிப் போனவர்களில் பலர் வெளிநாட்டு சிறைகளில் தான் அடைக்கலம். 

இது உங்கள் வாழ்க்கை.  நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இந்த ஊரில் வாழ்கின்ற வாழ்க்கையைப் போல் அங்கும் இருக்கும்  என்று எதிர்பார்க்காதீர்கள்.  நம்மோடு அவர்களை ஒப்பிடாதீர்கள். 

ஏமாறாதீர்கள் என்பதே நமது அறிவுரை!

No comments:

Post a Comment