Friday 17 May 2024

மீண்டும் கோவிட் 19 ?

 

ஏனோ தெரியவில்லை மீண்டும் மீண்டும் கோவிட்-19  நம்மை நோகடித்துக் கொண்டு தான் இருக்கிறது.

நமது அண்டை நாடான சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று வந்துவிட்டால்  நமக்கும் பக்பக் என்று அடித்துக் கொள்வது இயல்பு தான். நமக்கு மட்டும் என்ன? மலேசியாவில் மட்டும் இல்லையென்று சொல்லிவிட முடியுமா? 

இங்கும் நமக்குப் பிரச்சனைகள் உண்டு.  ஆனாலும் பெரிய அளவில் தொற்று பரவவில்லை என்பது ஆறுதலான செய்தி.   பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் கிடைத்துவிடுவதால்  தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது என நம்பலாம்.

ஆனால் ஜோகூர் பக்கம் உள்ள மக்கள் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வோடேயே  இருக்க வேண்டியது அவசியம்.  சிங்கப்பூரோடு அதிகத் தொடர்புடையவர்கள் இவர்கள்.  தினசரி போக்குவரத்துகள் உள்ளவர்கள் ஜொகூர் மக்கள்.  ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கில்  சிங்கப்பூருக்கு வேலைக்குப் போய் வருபவர்கள். 

தொற்று அங்கிருந்து இங்கு வரலாம் அல்லது இங்கிருந்து அங்கும் போகலாம்.  எதுவும் சாத்தியமே!    ஒரே வித்தியாசம்.  சிங்கப்பூர் அரசாங்கம் அதிவிரைவில் நடவடிக்கை எடுக்கும் என்பது மட்டும் நமக்குத் தெரியும். எடுத்தே ஆக வேண்டும்.  இல்லாவிட்டால் இரண்டு நாடுகளும் பாதிக்கப்படும். 

நம் நாட்டில் ஏற்கனவே ஏற்பட்ட பாதிப்பில்  இன்னும் பல நிறுவனங்கள் திறக்கப்படாமலே இருக்கின்றன.  அப்போது வேலை இழந்தவர்கள் இப்போதும் வேலை இல்லாமல் இருக்கின்றனர்.   இந்த நிலையில்  மீண்டும்  இன்னொரு தொற்றை நாடு எதிர்கொள்ள வழியில்லை.

சிங்கப்பூர் அரசாங்கத்தின் மீது நமக்கு நம்பிக்கை அதிகம்.  பிரச்சனைகளை அவர்கள் நீட்டிக்க விட மாட்டார்கள்.  உடனடி நடவடிக்கையில் இறங்கிவிடுவார்கள்!   

அதே போல நமது நாடும் செயலில் இறங்கிவிடும் எனவும் நம்பலாம். கோவிட்-19 தொற்று மறக்கக் கூடிய வியாதியா? இல்லவே இல்லை!

No comments:

Post a Comment