Friday 23 July 2021

இறைவனின் தண்டனையா?

கோவிட்-19 என்னும் தொற்று நோய் உலக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. நமது நாடும் அந்தத்  தொற்று  நோயோடு இன்னும் போராடிக் கொண்டிருக்கிறதே தவிர கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை.

மக்களில் பலர் இந்த நோய் மனித குலத்திற்கான இறைவனின் தண்டனை என்பதாகப் பேசி வருகின்றனர்.  மக்கள் விரக்தியின் விளிம்பில் இருக்கின்றனர். அவர்கள் சொல்லத்தான் செய்வார்கள்.

இருக்கட்டும். ஆனால் அதையே,  அதாவது இறைவனின் தண்டனை என்று ஒர் அரசியல்வாதி சொல்லுவாரானால் அது அவருடைய இயலாமை அல்லது கையாலாகத்தனம் என்று தான்  சொல்ல வேண்டி வரும்! இறைவனின் தண்டனையா?  இருக்க முடியாது!

இந்தப் பெருந்தொற்று இறைவனின் தண்டனை என்று ஓர் அரசியல்வாதி சொல்லுவாரானால் அவருக்கு ஏதோ மனக்கோளாறு என்று தான் சொல்ல வேண்டி வரும். அதாவது அந்த அரசியல்வாதி இறைவனும் தன்னைப் போன்று தான் என்று அந்த அரசியல்வாதி நினைப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டி வரும்!

இறைவனும் அரசியல்வாதியும் ஒன்றா?  இதைத் தான் நாம் அயோகியத்தனம் என்கிறோம்! அது சரி இறைவன் நல்லவரா, கெட்டவரா? எந்த ஒரு மதத்தினரும்  தாங்கள் வழிபடும் தெய்வம் கெட்டவர் என்று சொன்னதாக சரித்திரம் இல்லை!  கடவுள் என்றால் நல்லவர், அவ்வளவு தான்!

அப்படிப்பட்ட அந்த நல்ல கடவுள் ஏன் கெட்டவராக மாறி ஒரு பெரும் தொற்றை உலகுக்குக் கொண்டு வர வேண்டும்? அது சாத்தியமில்லை. கடவுள் மனிதருக்குக் கெடுதல் நினைப்பவர் அல்ல.  நல்லதை செய்பவர் தான் கடவுளே தவிர கெட்டதை செய்பவர் அல்ல.  அன்பைப் போதிப்பவர் கடவுள். மற்றவர்களையும் நேசி என்பவர் கடவுள். அப்படியிருக்க தீடிரென ஏன் கடவுள் கெட்டவராக மாற வேண்டும்.

இப்போது நடந்தது என்னவோ சீன நட்டின் அயோகியத்தனம் என்பதாகத்தான் உலகெங்கும் பேசப்படுகிறது. மனிதனுக்கு மனிதனே வைக்கின்ற ஆப்பு என்று இதைத்தான் சொல்லுகின்றனர்.  மனிதன் தனக்குத் தானே வைக்கின்ற வேட்டு என்று தான் பார்க்கப்படுகின்றது. சொல்லப்போனால் அரசியல் ரீதியான தாக்குதல் தான் இது.  அரசியல்வாதிகளின் அயோக்கியத்தனம், மனித குலத்தின் மீதான இழிச்செயல் தான் இந்த பெருந்தொற்று. 

கடவுளுக்கும் உலகை அழிக்கும் இந்த நாச செயலுக்கும் முடிச்சுப்  போடாதீர்கள்.  அரசியல்வாதிகளின் ஆணவம் தான் இந்தப் பெருந்தொற்று.

இறைவனின் தண்டனை அல்ல இந்த கோவிட்-19.  மனிதனின் ஆணவத்தால் விளைந்த தீய சக்தி இந்தத்  தொற்று.  அரசியல்வாதிகளின் அராஜகம்! பேராசைப் பேய்களின் பேயாட்டம்!

இறைவன் நல்லவர். போற்றத்தக்கவர். பேரன்புக்குரியவர். அவரைப் பழிசொல்ல யாருக்கும் தகுதி இல்லை!

இது இறைவனின் தண்டனை அல்ல! அராஜகம் பண்ணும் அரசியல்வாதிகள் அப்பாவி மக்களுக்குக் கொடுத்த தண்டனை!

No comments:

Post a Comment