Thursday 29 July 2021

கதவுகள் திறந்தன!


ஓடிக்கொண்டிருந்த LRT தொடர் வண்டியில்  தானாகவே கதவுகள்  திறந்து கொண்டது  எப்படி என்பது  புரியாத புதிர்!

 எந்த வித அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பது ஒரே ஆறுதல்.

ஏழு பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்த அந்த இரயில் பெட்டியில் அனைவரும் பத்திரமாக தரை இறக்கப்பட்டனர்.

இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது ஆனால் நடந்துவிட்டது! நடந்துவிட்டதை நடந்துவிட்டதாக ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறு என்ன செய்ய? நடந்து விட்டதை  நடக்கவில்லை என்று சொல்லவா முடியும்!

ஆனால் இந்த சம்பவத்தை இலேசாக எடுத்துக் கொள்ள முடியாது. பேருந்துகளில் கூட இப்படி நடந்தால் நமக்கு அச்சத்தை தரும். அப்படியிருக்க தொடர்வண்டி என்றால்?

இப்போதெல்லாம் மலேசியர்கள் பயணம் செய்கின்ற ரயில் பிரயாணங்கள், குறிப்பாக LRT பயணங்கள், எல்லாம் பாதுகாப்பற்றவை என்கிற எண்ணத்தை இது போன்ற செயல்கள்  நமக்கு  ஏற்படுத்துகின்றன.  ஏற்கனவே, சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னதாக,  இரண்டு LRT இரயில்கள்  நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போது இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளுதைப் பார்க்கும் போது இனி  இது தொடருமா என்கிற சந்தேகம் எழத்தான் செய்கின்றது.

இந்த இரயில் போக்குவரத்தை நடத்தும் நிறுவனம் எந்த அளவுக்கு இந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்தது என்பது தெரியவில்லை. இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்ற போதெல்லாம் "இனி இது போன்று சம்பவங்கள் நடக்காது!" என்று உறுதியைப் பொது மக்களுக்கு அள்ளி அள்ளி வீசுகின்றனர்! ஆனால் நடந்து கொண்டு தான் இருக்கிறது! என்ன செய்ய?

இனி மலேசியர்கள் எந்த ஒரு பொது போக்குவரத்தைப் பயன்படுத்தினாலும் நூறு விழுக்காடு பாதுகாப்பு என்பதை நம்ப வேண்டாம் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது! ஆபத்துக்களோடும், விபத்துக்களோடும் வாழ வேண்டியது  நமக்கு இயல்பான ஒன்றாகிவிட்டது!

இப்படி ஓடுகின்ற இரயிலில் கதவுகள் திறந்து கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாது தான்.  ஆனால் இரயிலில் கூட்டம் இல்லை அதனால் பிரச்சனைகளும் எழவில்லை என்று பார்க்கும் போது நாமே திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியது தான்!

கதுவுகள் திறந்தால் என்ன? நாமே போய் மூடாமல் இருந்தால் சரி!
 

No comments:

Post a Comment