Saturday 2 July 2022

புண்ணியம் கோடி!

 

செல்லியல் இணைய இதழில் படித்த ஒரு செய்தி மனதிற்கு  நெகிழ்வாக இருந்தது.

இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? இப்படியும் நிறுவனங்கள் இருக்கின்றனவா? நமப முடியவில்லை! இதற்கு முன்னரும் கேள்விப்பட்டதில்லை!

 தமிழ் நாடு, கோயம்புத்தூரில் இது நடைபெறுகிறது என்பதை அறியும் போது மேலும் மகழ்ச்சி. அது கே.பி.ஆர்., மில் நிறுவனம். அதன் உரிமையாளர் முனைவர் கே.பி.ராமசாமி.

அவர்கள் செய்கின்ற மாபெரும் சேவை என்பது அவர்களிடம் வேலை  செய்கின்ற  பெண் பணியாளர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து அவர்களைப் பட்டதாரிகளாக  உருவாக்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை  உயர்த்துவது தான்.  அவர்கள் செய்கின்ற வேலையிலும்,  தகுதிக்கு ஏற்ப,  பணி உயர்வு கொடுப்பதையும் நிர்வாகம் செய்து வருகிறது.

.பொதுவாக இதனை ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது.  ஒரு நிறுவனம் இந்த அளவுக்குத் தங்களது பணியாளர்கள் மீது அக்கறை காட்டுகின்றது என்றால்  அதனை நிச்சயமாக நாம் பாராட்ட வேண்டும்.

இப்போது உள்ள நடைமுறை என்ன?  நிறுவனங்களில் மேல் தட்டில் உள்ளவர்கள் மெத்த படித்தவர்கள். கீழ்தட்டில் உள்ளவர்கள் அரைகுறையாகப் படித்தவர்கள். மேல்தட்டில் உள்ளவர்கள் கீழ்தட்டில் உள்ளவர்களை மனிதர்களாகக் கூட மதிப்பதில்லை. அந்த அளவுக்கு வேறுபாடுகள் பார்ப்பவர்கள் இருக்கின்றனர். மேல் தட்டில் உள்ளவர்களுக்கு ஒரு வகையில் படித்தவர்களைக் கண்டால் கூட பிடிப்பதில்லை!

இப்படி ஒரு நிலையில் அதுவும் பெண் பணியாளர்களைப் பட்டதாரிகளாக்குவது என்பது நாம் சாதாரணமாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? ஒரு கருத்து சொல்லப்படுவதுண்டு: பெண் கல்வி கற்றால் அந்த குடும்பமே கல்வி கற்ற குடும்பமாக மாறிவிடும். ஆண்கள் மீது நமக்குள்ள நம்பிக்கை குறைந்துவிட்டது.  "டாஸ்மார்க்" அடிமையாக எப்போது மாறுவான் என்று சொல்ல முடியாது!

இந்த நிறுவனத்தை நடத்தும் முனைவர் கே.பி.ராமசாமி அவர்கள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.  அந்த நிறுவனத்தின் இந்த ஓன்பதாம் ஆண்டும் பட்டமளிப்ப விழாவில் கலந்து கொண்ட  மனிதவள அமைச்சர் டான்ஸ்ரீ எம்.சரவணன் அவர்களையும் பாராட்டுகிறோம்.

பாரதி சொன்னது போல்: "புண்ணியம் கோடி ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்பது அனைவருக்கும் சொல்லப்பட்டது தான்.


No comments:

Post a Comment