Tuesday 5 October 2021

இனத்துவேஷம்

 

இனத்துவேஷம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே இனத்துவேஷத்தை வளர்த்துக் கொண்டிருப்பவர்கள் நம்மூர் அரசியல்வாதிகளாகத்தான்  இருக்க வேண்டும்!

ஓர் அரசியல்வாதியை யாரும் கண்டுகொள்ளவில்ல என்றால் அவன் செய்ய வேண்டியதெல்லாம் மற்றொரு இனத்தைப் பற்றி ஏளனமாகப் பேசினால் போதும்! அவனுக்கு உடனே பெரிய விளம்பரம் கிடைத்துவிடும்!  அவன் தேடிய விளம்பரம் கிடைத்ததும் அவன் இல்லாத மீசையை முறுக்கிவிட்டுக் கொள்வான்!
ஊடகங்கள் மூலம் கிடைக்கும் விளம்பரங்கள் போதாதென்று காவல்துறையும் அவனுக்குப் போதுமான விளம்பரம் கொடுக்கும்! சும்மா விசாரணை என்று சொல்லி  அவனைக் கூப்பிட்டுப் பேசி இரு தரப்பும் சிரித்துவிட்டுப் போய்விடுவார்கள்!  அவ்வளவு தான்!

காவல்துறை விசாரணை செய்தால் ஏன் இப்படி தொடர்ந்து இந்த இனத்துவேஷ பேச்சுக்கள் பேசப்படுகின்றன? ஏன் காவல்துறையால் இதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை? காரணம் இனத்துவேஷத்தைப் பேசுபவர்கள் ஆளுந்தரப்பினர். பதவியில் உள்ளவர்கள். அமைச்சராக இருப்பவர்கள். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள். இவர்கள் மேல் கைவைக்க காவல்துறைக்கு அதிகாரமில்லை! அதனால் அவர்கள் இனத்துவேஷம் என்று வரும் போது அவர்களே,  வெட்டி ஒட்டி பேசி,  அவர்களே ஒரு முடிவுக்கு வந்து விடுகின்றனர்!  பாதிக்கப்பட்டவருக்கு ஒரு  அனுதாபமும் கூட கிடைப்பதில்லை!

இது தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நாமும் பேசிக் கொண்டிருக்கிறோம்.  தொடர்ந்து அவர்களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்!

இது தாண்டா சாக்கு என்று இன்னொரு தரப்பு உடனே தாய்மொழி பள்ளிகள் தான் இதற்கெல்லாம் காரணமென்று மூக்கை நுழைப்பார்கள்! அப்படியென்றால் அவர்கள் ஏன் தாய்மொழிப் பள்ளிகளுக்குப் போகிறார்கள்? அவர்கள் பள்ளிகள் தானே இனத்துவேஷத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றன?

இனத்துவேஷமா? இல்லை! ஈனர்களின் வேஷம்!


No comments:

Post a Comment