Thursday 21 October 2021

இந்த விருதுக்கு நான் தகுதியல்ல!

 

                                                        ராணி இரண்டாம் எலிசபத்

பிரிட்டனின்  பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று கொடுத்த  விருதினை ராணி இரண்டாம் எலிசபெத் வேண்டாமென உயரிய மரியாதையோடு திருப்பிக் கொடுத்துவிட்டார்.           

  "ஆண்டின் வயதானவர்" என்கிற அந்த விருது தனக்கு ஏற்ற விருது அல்ல என்பதாகக் கூறி அந்த விருதனைப் பெற  மறுத்துவிட்டார்!

ராணி எலிசபத் அவர்களுக்கு வயது 95.   இருப்பினும் "வயதானவர்" என்கின்ற அந்த விருதினைப் பெறுகின்ற தகுதி  தனக்கு இல்லை என்பதாக அவர் கூறுகிறார்! அந்த விருதுக்குத் தகுதியானவரை உங்களால் கண்டுபிடிக்க முடியும். அவருக்கே அந்த விருதை கொடுத்து விடுங்கள். நான் தகுதியானவள் அல்ல என்பதே அவரின் நிலைப்பாடு! 

அரசி சொல்லுவது சரிதான். அவர் தினசரி தனது அலுவல்களைக் கவனிக்கிறார். மக்களைச் சந்திக்கிறார்.  அரச தந்திரிகளைச்  சந்திக்கிறார். தூதுவர்களைச் சந்திக்கிறார். தேவை என்கிற போது தனது கையெழுத்தைப் போடுகிறார்.  அவர் வேலையில் அவர் சரியாகவே  நடந்து கொள்கிறார்.

அவரிடம் முதுமை இல்லை.  அப்படி இருப்பதாகவும் அவருக்குத் தோன்றவில்லை. எப்போதும் அவருக்கு ஏற்ற வேலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார்.

ஒருவர் வேலையில் சுழன்று கொண்டிருக்கும் போது வயது பற்றி கவலை இருப்பதில்லை. நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிரையே எடுத்துக் கொள்ளுங்கள். அவரும் ஒரு 95 வயது நபர் தான். ஆனால் அவர் இன்னும் அரசியலில் ஈடுபாட்டுடன் தானே இருக்கிறார். அவர் வயதைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை.  நாம் தானே கவலைப்படுகிறோம்.

ஆக, அரசி சொல்லுவது சரிதான்! முதுமை என்பது ஏதோ எண்களை வைத்து கணக்குப் பண்ணுவது  அல்ல! அது மனம் சம்பந்தப்பட்டது!

அந்த விருதுக்கு "நான் தகுதியானவள் அல்ல!" என்று அரசி கூறுவது சரியே!


No comments:

Post a Comment