Tuesday 19 October 2021

விமான விபத்துகளைத் தடுக்கும் பன்றிகள்!

 

        மேலே படத்தில் காணப்படுவது பன்றிகளே தான்! ஐயம் வேண்டாம்!

ஆனால் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலை தான் மகா பெரிய வேலை!

கடவுள் உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகளுக்கும் ஏதோ ஒரு வேலை கொடுத்துத்தான் இருக்கிறார். அதனைப் புரிந்து கொண்டு அந்த வேலையைக் கொடுத்துவிட்டால் அனவைருக்கும் மகிழ்ச்சி!

பன்றிகளைப் பற்றி நமக்கென்ன தெரியும்?  நமக்குத் தெரிந்தது ஒன்று: காட்டுப்பன்றிகள்.  இன்னொன்று: சீனர்கள் வளர்க்கும் நாட்டுப்பன்றிகள். இரண்டுமே மனிதர்களின் உணவுக்குத்தான் பயன்படுகின்றன. சீனர்கள் வளர்க்கும் பன்றிகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன 

சரி! நமது கதைக்கு வருவோம்.  நெதர்லாந்து நாட்டின் அமர்ஸ்டாடம் விமான நிலையத்தில் தீர்க்க முடியாத  ஒரு பிரச்சனையை இருபது பன்றிகளைக் கொண்டு தீர்த்து வைத்திருக்கின்றனர்!

விமான நிலையத்தின் ஓடுதளங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் சக்கரவள்ளிக் கிழங்கு பயிரிடுகின்றனர்.   அறுவடை செய்கின்ற நேரங்களில் கிழங்குகள் முழுமையாக வெளியாகாமல் மண்ணுக்குள்ளே புதைந்து கிடக்கும். இந்த கிழங்குகளை உண்ண பறவைகள் படையெடுப்பது வழக்கமான ஒன்று.

உணவுகள் தாராளமாக கிடைப்பதால் பறவைகள் ஓடுதளத்தின் அருகிளேயே கூடுகளைக் கட்டுவதும், சுற்றித் திரிவதும் விமானங்களுக்குப் பெரிய மிரட்டலாக இருந்ததை எப்படி சமாளிப்பது என்று வழி தெரியாமல் விழி பிதுங்கி இருந்த நேரத்தில் இப்படி ஒரு அபாரமான பொறி அவர்களுக்குத் தட்டியது!

ஆமாம்! பன்றிகளை அங்குள்ள விவசாய நிலங்களில் கொண்டு வந்து விட்டால் அந்த பன்றிகள் கிழுங்குகளை முழுமையாக தின்று தீர்த்துவிடும்! பறவைகளுக்கு அங்கு வேலையில்லாமல் போய்விடும்! அது தான் அவர்களின் கண்டுபிடிப்பு!  இப்போது அது அவர்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. பறவைகள் வேறு விவசாய நிலங்களுக்கு இடத்தை மாற்றிக் கொண்டு விட்டன!

சென்ற ஆண்டு மட்டும் இந்த பறவைகளினால் சுமார் 50 விமான விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றனவாம்.

பறவைகளும் விமான விபத்துக்களை ஏற்படுத்த முடியும்! பன்றிகளும் விமான விபத்துகளைத் தடுக்க முடியும்!

No comments:

Post a Comment