Friday 29 October 2021

ஏன் இரண்டு வாரங்கள்?

 

                                             Filthy Tofu Factory Closed - Nibong Tebal
 நிபோங் திபால், பினாங்கு நகரில் உணவு தொழிற்சாலை ஒன்று  இரண்டாவது முறையாக இரண்டு வாரங்கள் அடைக்கும்படி சுகாதார அமைச்சு உத்தரவிட்டிருக்கின்றது!

அந்த உணவு எந்த உணவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?  ஆமாம் நாம் விரும்பி சாப்பிடும் அதே "தவ்வு" என்கிற உணவு தான்!  சீனர்கள் செய்கின்ற அதே தவ்வு தான்!

தொழிற்சாலை அடைப்பதற்கான காரணங்கள் என்ன?

1) உணவு தயாரிக்கும் பகுதி மிகவும் அருவருப்பாக உள்ளது!
2) தொழிற்சாலைக்குள் நாய்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன!
3) எலிகளின் கழிவுகள் தாராளமயமாக்கப்பட்டிருந்தன!
4) ஈக்கள்,  கரப்பான் பூச்சிகள் வலம் வந்து கொண்டிருந்தன!
5) தொழிற்சாலை 12 ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது!
6) ஊராட்சி மன்றத்தின் வர்த்தக உரிமம் பெற்றிருக்கவில்லை!
7) பணியில் இருந்த மியன்மார் ஆடவர் ஒருவர் "டைபாய்ட்" ஊசி போட்டிருக்கவில்லை! உணவு தொழிற்சாலைகளுக்கான உடைகள் அணியவில்லை!
8) சுகாதார அமைச்சின் கணிப்பில் இது 200% விழுக்காடு சுகாதாரமற்ற உணவு தொழிற்சாலை!

சுகாதார அமைச்சு சொன்னால் சரியாகத்தான் இருக்கும். அதனை யாரும் குறை சொல்லப் போவதில்லை.

ஆனால் மக்கள் அவர்கள் தயாரிக்கும் அந்த தொழிற்சாலை தவ்வு இன்றும் என்றும்  பெரும்பான்மை மக்களால்  விரும்பி சாப்பிடப்படும் உணவாயிற்றே! அது எப்படி 12 ஆண்டுகளாக இயங்கும் உணவு தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை உரிமம் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது? கேள்விகள் உண்டு! பதில் தர யாரும் தயாராக இல்லை!

இன்னொரு கேள்வியும் உண்டு. ஒரு முறை, இதே காரணத்திற்காக, கையும் களவுமாக பிடிப்பட்ட ஒரு தொழிற்சாலை மீண்டும் இரண்டாவது முறையும் அதே குற்றப் பின்னணியில் எப்படி இயங்க முடியும்?  அவர்களுக்கு அந்த தைரியத்தை ஊக்குவித்தவர்கள்  யார்?

கடைசியாக,  ஏன் இரண்டு வாரங்கள் கதவடைப்பு? முற்றிலுமாக அந்த தொழிற்சாலை தூக்கப்பட்டிருக்க வேண்டுமே! உணவகத் தொழிலுக்கே அவர்கள் இலாயக்கற்றவர்கள் என்று சுகாதார அமைச்சுக்கு இன்னுமா புரியவில்லை!

குற்றவாளி சுகாதார அமைச்சு தான்!

No comments:

Post a Comment