Friday 10 September 2021

ஏன் இந்த அவசர சட்டம்?

 முஸ்லிம் அல்லாத  சமயங்கள் தொடர்பான ஷாரியா சட்டத் திருத்தம் தேவையா என்னும் கேள்வி எழத்தான் செய்கிறது!

அந்த சட்டத் திருத்தத்தை சபா மாநிலம் நிராகாரித்திருக்கிறது என்பது சரியான முடிவு என்பதே நமது கருத்தும் கூட. இப்படி ஒரு சட்டத் திருத்தத்திற்கு என்ன தேவை வந்தது என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும்.

சபா மாநில முதல்வர் ஒரு முஸ்லிம். ஏன் அவர்கள் நிராகரிக்கிறார்கள் என்பதற்கு  அவர் விளக்கம் தந்திருக்கிறார்.  மாநிலத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் மத நல்லிக்கணக்கத்தை குலைக்க அவர் விரும்பவில்லை என்பதே அந்த விளக்கத்தின் சாரம்.

சபா மாநிலத்தில் மக்கள் என்ன நிலையில் இருக்கிறார்களோ அதே நிலைதான் மற்ற மாநிலங்களிலும். மத நல்லிணக்கத்தோடு தான் எல்லா மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். மத சண்டைகள் என்பதாக நம் நாட்டில் எந்தக் காலத்திலும் வந்ததில்லை. கோவில்கள் உடைப்பு, அதிகாலையில் கோவில்கள் உடைப்பு, எந்த அறிவிப்பும் இல்லாமல் கோவில்களை உடைப்பது, பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே கோவில்களை உடைப்பது இவைகள் எல்லாம் செய்வது அரசாங்கம் மட்டும் தான்! குற்றம் புரிபவர் யார்?

மேலும் இப்போதும் கூட கோவில்கள் எப்படி கட்ட வேண்டும், என்ன அளவில் கட்ட வேண்டும்,  எந்த இடத்தில் கட்ட வேண்டும் என்று ஆயிரெத்தெட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டுத் தான் அனைத்துக்  கொவில்களும் கட்டப்படுகின்றன! இது போதுமே! புதிதாக இன்னும் என்ன தேவை?

நமக்கு உள்ள சந்தேகம் எல்லாம் இன்றைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாஸ் கட்சியினர் செய்கின்ற ஏதோ தில்லுமுல்லு வேலைகள் என்று தான் நாம் நினைக்க வேண்டியிருக்கிறது! வருங்காலங்களில் அவர்களுக்கு மத்திய அரசாங்கத்தில் அங்கம் பெறுகின்ற வாய்ப்பில்லை என்பதால், இப்போது அரசாங்கத்தில் பங்குபெற்றிருக்கும் போதே, ஏதாவது சலசலப்பை ஏற்படுத்த வேண்டுமென்று நினைக்கின்றனர்! நிச்சயமாக அது முஸ்லிம் அல்லாதவர்களுக்குப் பாதகமாகத்தான் முடியும் என்று நம்பலாம்!

இந்த நேரத்தில் அவசர சட்டமோ எந்த சட்டமோ தேவையில்லை!

No comments:

Post a Comment