Wednesday 8 September 2021

எறும்புக்கும் வலிமை உண்டு!

 "எறும்பு ஊர கல்லும் தேயும்" என்பது பழமொழி!

பொதுவாக எறும்பு என்றாலே நாம் அதனை அலட்சியமாகப் பார்ப்பதுண்டு. அது என்னவோ, அதனைப் பார்த்து சீண்டுகிற அளவுக்கு,  சொல்லத்தக்க அளவுக்கு,   ஒன்றுமில்லை என நாம் நம்புகிறோம்!

உண்மை தான்! நம் கண்முன்னே ஒன்று, இரண்டு  எறும்புகளைப்  பார்த்தால் அதனை நமது விரல்களால் நசுக்கிக் கொல்வோம்! பாவம்! அது ஒன்றுமே செய்யவில்லை. நாம் ஏன் அதனைக் கொல்லுகிறோம் என்பது கூட அவைகளுக்குத் தெரிவதில்லை! நமக்கும் தெரியாது!

எல்லாவற்றுக்கும் நேரம் காலம் உண்டு என்பார்கள். ஒரு வேளை நமது நேரம் சரியில்லை என்றால் எங்காவது ஓர் இடத்தில் மயங்கி விழுந்து கிடந்தோமானால் எறும்புக்கு அது நல்ல நேரம்! ஓர் ஆயிரம் எறும்புகள் ஒன்று சேர்ந்தால் நம்மை சப்பி எடுத்துவிடும்! அரித்து எடுத்து விடும்! உயிர் பிழைத்தால் இறைவனுக்கு நன்றி!

ஒரு எரும்பை நாம் கொல்லலாம். ஆயிரம் எறும்புகள் ஒன்று சேர்ந்தால் நம்மை அது கொன்றுவிடும். அது தான் எறும்புகளின் வலிமை.

சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்று நம்மை அதிர வைக்கும்! ஏர் இந்தியா விமானத்தை சுமார் மூன்று மணி நேரம் தாமதிக்க வைத்திருக்கிறது இந்த ஏறும்பு கூட்டம் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்!

டில்லி - லண்டன் விமானப் பயணம் சுமார் 2.00 மணிக்குப் புறப்பட வேண்டிய அந்தப் பயணம் சுமார் 5.20 க்குத் தான் புறப்பட வேண்டி வந்ததாம்! அதுவும் பூத்தான் நாட்டு இளவரசர் அந்த விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்! அவர் பயணம் செய்த முதல் வகுப்பில் இந்த எறும்புகளும் இலவசப் பயணம் செய்ய இருந்த நேரத்தில் அதனைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்!

ஆனாலும் ஏர் இந்தியா அந்த விமானத்தை அப்படியே அங்கே போட்டுவிட்டு  வேறு ஒரு ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அது லண்டன் போய் சேர்ந்த நேரம் இரவு இந்திய நேரம் 9.43 மணிக்கு. எறும்புகள் தொல்லைகள் இல்லாமல் அந்தப் பயணம் அமைந்ததாக சொல்லப்படுகிறது.

இறைவன் படைப்பில் எதுவுமே வலிமையற்றது என்பது இல்லை. ஒருவனால் முடியவில்லை என்றால் பலர் சேர்ந்து ஒருவனை அடிக்கிறார்களே அதையே தான் இந்த எறும்புகளும் செய்கின்றன!

எறும்புகளுக்கும் வலிமை உண்டு! ஈ, காக்கைகளுக்கும் வலிமையுண்டு!

No comments:

Post a Comment