Thursday 16 September 2021

சீனர்களே அதிகம்!

 நாடாளுமன்றத்தில் பிரதமர் கொடுத்த தகவல்களின்படி 2018-ம்  ஆண்டிலிருந்து சுமார் 2,426 தற்கொலை சம்பவங்கள் நாட்டில் நடந்தேறியிருக்கின்றன என அறிய முடிகிறது.

இதில் ஆண்களே அதிகம். அதில் சீனர்கள் 807, இந்தியர்கள் 462, ம்லாய்க்காரர்கள் 362.

நாம் அதிர்ச்சியான செய்தியாக பார்ப்பது சீனர்களே அதிகம் தற்கொலை செய்து கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பது தான். அப்படி ஒர் எண்ணம் நமக்கு வருவதற்குக் காரணம் சீன சமுதாயம் ஒரு முற்போக்கான சமுதாயம் என்பது தான்.  

நமக்கு அவர்களைப் பற்றி உயர்வான அபிப்பிராயம் உண்டு. படித்த சமுதாயம், ஒற்றுமையான சமுதாயம், பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் சமுதாயம் இப்படித்தான் நாம் அவர்களைப் பார்க்கிறோம்.  ஆனால் அப்படியெல்லாம்  "ஒரு மண்ணுமில்லே!" என்று இந்த செய்தி கூறுகிறது!

 பணம் இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை என்று தான் நாம் நினைக்கிறோம். ஆனால் அது அப்படி அல்ல! பணம் இருப்பவனுக்குத் தான் பிரச்சனைகள் அதிகம்!

பொருளாதாரம் வேண்டும். அதனைப் பெருக்க வேண்டும். அதனைப் பெருக்கிய பின் அது தொடர்ந்த தற்காக்கப்பட வேண்டும்.  பொருளாதார பெருக்கத்திற்குப் பின் அதற்கேற்ற வாழ்க்கை வாழ வேண்டும். பெரிய கார் வேண்டும். பெரிய வீடு வேண்டும். பிள்ளைகளை வெளிநாடுகளில் படிக்கவைக்க வேண்டும்.  இப்படி எல்லாமே ஆடம்பரம் தான். தவறில்லை! வாழ்க்கை அப்படித்தான் அமையும்! கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் கூட அதைத்தான் செய்கிறான். ஆனால் அரசியல்வாதி எந்தக் காலத்திலும் நிம்மதியோடு இருந்ததில்லை!

சீனர்கள் கையில் பணத்தை  வைத்துக் கொண்டு தங்களை அஞ்சாநெஞ்சர்களாக நடிப்பது அதிகம்! அதுவும் ஏமாந்த தமிழனாக இருந்தால் அவனை முழுவதுமாகவே மொட்டையடிக்கத்  தயங்கமாட்டார்கள்! அப்படி ஒரு கல்மனம் அவர்களுக்கு!  ஏன் தங்கள் இனத்திலேயே அவர்கள் பாவபுண்ணியம் பார்ப்பதில்லை! "தகுதியானவன் தான் பிழைக்க முடியும்" என்பது தான் அவர்களுடைய கொள்கை!

நமகுள்ள ஆச்சர்யம்  எல்லாம் ஒரு பணக்கார சமுதாயம் ஏன் இப்படி தற்கொலையை நாடுகிறது என்பதுதான்!  ஒரே காரணம் தோல்வியை அவர்களால் தங்கிக்கொள்ள முடியவில்லை! எல்லா சமுதாயத்திலும் அது உண்டு. ஆனால் இவர்களால் பொருளாதார தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

எப்படிப் பார்த்தாலும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது ஒரு தீர்வல்ல!  எந்த இனமாக இருந்தாலும் அது தான் உண்மை! ஆனாலும் தற்கொலை என்பது ஒரு விநாடியில்  ஏற்படக் கூடியது! அதற்குக் காரண காரியம் தேவை இல்லை!

இதற்கு  தீர்வே இல்லையா? இருந்தால் ஏன் தற்கொலை மரணங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன!

No comments:

Post a Comment