Sunday 12 September 2021

நூறாவது ஆண்டு நினைவு நாள்!

 முதலில் தமிழ் நாடு முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறோம்.

பாரதியார் இறந்த நூற்றாண்டு நினவு நாளை (11.9.2021) இனி ஆண்டு தோறும் செப்டம்பர் 11- நினைவு நாளை மகாகவி நாளாகக்  கொண்டாடாப்படும் என அறிவித்திருக்கிறார்.

ஆனால் அது வெறும் மகாகவி நாளாக மட்டும்  அல்லாமல் அந்த நாளில் பள்ளி மாணவர்களுக்குக் கவிதை  போட்டிகளையும் அறிவித்திருப்பது இன்னும் சிறப்பு.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இளம் கவிஞர்களுக்கான கவிதை போட்டி. போட்டியில் பரிசு பெறும் மாணவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசு.

பாரதியாரின் பாடல்கள், கட்டுரைகள் அனைத்தும்  "மனதில் உறுதி வேண்டும்"  என்று புத்தகமாகத் தொகுக்கப்பட்டு   சுமார் 37 இலட்சம்  அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுப்பது.  இதற்கான செலவு 10 கோடியை அரசு ஏற்கும்.

முதல்வர் அவர்களின் இந்த அறிவிப்புக்கள் நமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன.  ஆனால் இவைகள் அனைத்தும் வெறும் அறிவிப்புக்களாக  ஆகிவிடக்கூடாது என்பது தான் நமக்குள்ள எதிர்பார்ப்பு.

காரணம் தி.மு.க. அரசு வெறும் அறிவிப்புக்களை வைத்தே தமிழர்களை ஏமாற்றும் அரசு என்கிற பெயர் உண்டு. அந்த குற்றச்சாட்டு கலைஞர் காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது.

இப்போது அது தொடரக் கூடாது என்பதைத் தான் தமிழர்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். "உடனடியாக அமலுக்கு வருகிறது" என்றால் நமக்குப் பிரச்சனையில்லை. ஆனால் அது அடுத்த ஆண்டு என்னும் போது கொஞ்சம் தயக்கம் இருக்கத்தான் செய்யும். காரணம் தி.மு.க. கொடுத்த முன்னாள் அனுபவம்!

ஆனாலும் இந்நாள் முதலமைச்சர் மீது நமக்கு நல்ல மரியாதை உண்டு. அவர் தமிழர்களை ஏமாற்றுவார் என்று நாம் நினைக்கவில்லை. அப்படி ஒரு நிலையும் வராது என நாம் நம்புவோம்.

பாரதியார் "மகாகவி நாள்" என்பது தமிழர்களின் இனிய நாள். வாழ்த்துகள் முதல்வரே! 

No comments:

Post a Comment