Tuesday 28 September 2021

சட்டம் என்பது அனைவருக்கும் தான்!

 

சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்று தான். ஆனால் ஆளும் கட்சி அரசியல்வாதியாக இருந்தால் சட்டத்தை மீறலாம் என்பதாக ஒரு சிலர் நினைக்கின்றனர்!

அதனால் தான் பல சட்ட மீறல்கள், கோவிட்-19 தொற்றின் போது வெளியே போகக் கூடாது என்று தெரிந்தும், உணவகங்களைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிந்தும் அதனையெல்லாம் சட்டை செய்யாமல் சட்டத்தை மீறிய சம்பவங்கள் சமீபத்தில் நடந்தேறின! இதில் பெரும்பாலோர் ஆளும் பாஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான்!

இப்போது நடந்திருப்பதோ அக்கறையின்மையின் உச்சம் என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை. இதனை அராஜகம் என்று தான் சொல்ல வேண்டும். பொறுப்பற்ற ஒரு செயல். அறிவற்றவன் என்று சொல்லக்கூடிய ஒருவன் கூட இப்படி கார் ஓட்ட மாட்டான் என்று தாராளமாகச் சொல்லலாம். கஞ்சா அடித்துவிட்டு வேண்டுமானால் அப்படி ஓட்டியிருக்கலாம்!

ஆனால் இப்படி சட்டத்தை மீறிப் போகின்ற வாகனம் யாருடையது? சமயத்துறைக்கான துணை அமைச்சர்,  அகமட் மார்ஸுக் ஷாரி அவர்களின் கார் தான் அது!

இது ஒரு வெட்கக்கேடான செயல் என்பது அனைவருக்கும் தெரிகிறது. பாஸ் கட்சியினர் ஷாரியா சட்டம் பற்றி பேசும் போது நாம் ஏன் அதனை எதிர்க்கிறோம்? அவர்கள் சட்டத்தை மீறுவார்கள் ஆனால் தண்டிக்கப்படுவதோ ஏழை மக்கள் தான். அவர்கள் தப்பித்துக் கொள்வார்கள்!

இப்படி அபாயகரமான முறையில் கார் ஓட்டினால் சராசரியான மனிதர்களுக்கு என்ன தண்டனையோ  அந்தத் தண்டனை இவர்களுக்குக் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்று தான். சட்டம் உடைபடுமா, காக்கப்படுமா? பார்ப்போம்!

No comments:

Post a Comment