Monday 10 July 2023

இந்தியர்களின் ஆதரவு யாருக்கு?

 

நம் நாட்டில் நாம் இப்போது ஆறு மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கின்றோம்.

அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு கேள்வி: இந்தியர்களின் வாக்கு யாருக்கு என்பது தான்.  நாம் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும்  நமது வாக்கு எங்கு போகிறதோ அவர்கள் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எல்லாத் தொகுதிகளிலும் அப்படி ஒரு நிலைமை இல்லையென்றாலும் பல தொகுதிகளில் அப்படி ஒரு நிலைமை உண்டு என்பது தான் பலரின் கருத்து.

இந்தியர்கள்  பல கட்சிகளில் இருக்கின்றனர். நமக்கு அதில் ஆட்சேபணை இல்லை. அது அவர்கலின் சுதந்திரம். ஆனால் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். நமது சமூகம் அதிகமாக ம.இ.கா.வை நேசித்தவர்கள். அக்கட்சியை நம்பி நாம் ஏமாந்தது என்னனவோ உண்மை. அங்கிருந்தவர்கள் பலர் பி.கே.ஆர். கட்சியில் இருக்கின்றனர். ஜ.செ.க. விலும் பல இந்தியர்கள் இருக்கின்றனர்.

இந்த நேரத்தில் நமது நலனுக்கு நல்லது என்றால் அது ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஒரு சிலர் அதற்குள்ளாகவே அன்வார் பிரதமராக வந்தார். இந்தியர்களுக்கு என்ன செய்துவிட்டார் என்கிற கேள்வி  இப்போது எழுப்பக் கூடாது. போதுமான அவகாசம் அவருக்கு இல்லை. கூடவே ஊழல் கட்சியான அம்னோ ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.  மலாய்க்காரர்களைத் திருப்தி படுத்துகின்ற வேலையும் அவருக்கு உண்டு. இப்படி பல சிக்கல்களையும் அவர் சந்தித்துக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் நினைத்தது போல் அவரால் செயல்பட  முடியவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒரே காரணம்  நாடாளுமன்றத்தில் போதிய பலம் இல்லாததே.

நாம் சொல்ல வருவதெல்லாம் உறவுகளே! பொறுத்திருங்கள். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக பொறுத்திருந்து விட்டோம். இன்னும் சில ஆண்டுகள் பொறுத்திருக்கத்தான் வேண்டும். போதிய பலம் நாடாளுமன்றத்தில்  கிடைத்துவிட்டால் அப்போது தான்  பிரதமர் அன்வார் சுயம்புவாக இயங்க முடியும்.  அன்வார் மேல் நம்பிக்கை வையுங்கள். முடிந்தவரை அவர் இந்தியர்களுக்கு உதவியாகத்தான் இருப்பார். இன்றைய சூழல் அவருக்குச் சாதகமாக இல்லை.

என்னைக் கேட்டால்,  என்னுடைய அறிவுரை என்னவென்றால்,   ஒற்றுமை அரசாங்கத்திற்குத் தான் இந்தியர்களின் ஆதரவு இருக்க வேண்டும். அது தான் அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது. ஒற்றுமை அரசாங்கத்திற்கு நாம் ஆதரவு அளிக்கவில்லை என்றால்  சட்டமன்றங்கள் முகைதீன் யாசின் கைகளுக்குப் போய்விடும்.  அவரின் சட்டமன்றம் நமக்கு எதிராகத்தான் செயல்படும். அவர் இந்தியர்களைப் பற்றி கவலைப்படாதவர்.

அதனால் ஒற்றுமை அரசாங்கத்தை மாநிலம் எங்கும் அமைப்பதே நமது எதிர்காலத்திற்கு நல்லது.

No comments:

Post a Comment