Sunday 2 July 2023

ஊழலா? தொடரட்டும்!

 

ஊழல் என்பது நாட்டின் மிகப்பெரும் பிரச்சனை. இதனை நாம் அறிந்துதான்  இருக்கிறோம்.

ஆனால் இதுநாள் வரை அரசாங்கம் அதுபற்றி கவலைப்படவில்லை! காரணம் அது ஊழல்வாதிகளால் நடத்தப்பட்ட அரசாங்கம்!

இப்போது இந்த ஒற்றுமை அரசாங்கத்தில், பிரதமர் அன்வார் இப்ராகிம், தன்னால் ஊழலை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் ஊழல் பேர்வழிகளின் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நடவடிக்கை என்னும் போது அதில் ஒற்றுமை அரசாங்கத்தில் பதவி வகிப்பவர்களும் அடங்குவர்!

இங்கு தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. இந்த ஊழல்வாதிகள் அனைவரும் சேர்ந்து இந்த ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்று  அவர்களும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

இதில் முக்கியமாக முன்னாள் பிரதமர்கள் டாக்டர் மகாதிர், முகைதீன் யாசின் இன்னும்  பல பிரபலங்கள்!  அம்னோ என்றாலே ஊழல் கட்சி தானே!  ஊழலில்  மட்டும் அவர்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள் என்பது தான்  உலக மகா உண்மை! அதற்குத் தலைமை டாக்டர் மகாதிர்!

இந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க முன்னணியில் நிற்பவர் டாக்டர் மகாதிர்! இவரும் இவரது குடும்பமும் பல பல கோடிகளுக்குச்  சேர்த்து வைத்திருப்பவர்கள்!  நடிப்பில் மாமனிதர்!  மற்றவர்களையெல்லாம்  ஊழல்வாதிகள் என்று குறை சொல்லும் டாக்டர் மகாதிர்,  தான் செய்த ஊழல்களை மிகத்திறமையாக மறைத்துவிட்டோம் என்று என்ன தான் தனக்குத் தானே திரைப் போட்டுக் கொண்டாலும் உண்மை ஒருநாள் வெளிவரும்  என்பதை மறந்து போனார்!

ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. ஊழல்வாதிகள் ஒன்று சேர்கிறார்கள்! தலைமை டாக்டர் மகாதிர். மகாதீருக்கு மலபார் மூளை! ஒன்று சரியாகப் போனால் அதனை அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது! அதனை ஒழிக்க வேண்டுமென்று தான் அவர் சிந்திப்பார்! ஓர் ஐம்பது அறுபது ஆண்டுகளாக அழிப்பு, ஒழிப்பு  வேலையில் தான் அவர் ஈடுபட்டவர். எதனையும் ஆக்ககரமாக செய்யவது என்பது அவரது குணயில்பு அல்ல.

அதே சமயத்தில் முகைதீன் யாசின்  பிரதமர் பதவிக்காக எதனையும் செய்யக்கூடியவர். ஆக, அழிவுச் சக்திகள் ஒன்று சேர்கின்றனர். இவர்களை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

இவர்கள் பதவியில் இருக்கிறார்களோ இல்லையோ எல்லாமே எப்போதும் போல வழக்கமாக நடந்து கொண்டு தான் இருக்கும். மக்கள் சுபிட்சமாகத் தான் வாழ விரும்புகிறார்கள். இந்த நாடு வளமான நாடாகத் தான் மாறும். அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஊழலைத் தொடர விரும்பும் அரசியல்வாதிகள் வீழ்வார்கள் என்பதை நாம் நம்பலாம்!


No comments:

Post a Comment