Sunday 28 August 2022

சட்டம் சரியாகவே வேலை செய்கிறது!

 

                      Azrene Ahmad,  daughter of Rosma Mansor from her previous marriage.                                                          She is married to celebrity chef Fazley Yaakob  

"நீதிமன்றம் எனது தாயாருக்குச் சரியான தண்டனையையே  கொடுத்திருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும்" என்று கூறியிருப்பவர் ரோஸ்மாவின் முதல் கணவரின் மகள், அஸ்ரின்.

நீதிமன்றத்தைக் குறை கூறுபவர்கள் ஒன்றை கவனிக்க வேண்டும்.  நீதிமன்றம் சும்மா கண்ணை மூடிகொண்டு தீர்ப்புகளை வழ்ங்குவதில்லை. தீர்க்க ஆராய்ந்து தான் நீதிபதிகள் தீர்ப்புகளைக் கூறுகிறார்கள். யார் பக்கம் நியாயம் என்பது தான்  அவர்களுக்கு முக்கியம்.

இன்று ரோஸ்மா குற்றவாளி என்றாலும் அன்று அவர் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்தால் அவர்  ஒரு மலேசியராகவே வாழவில்லை. சராசரி என்று வேண்டாம், காலங்காலமாக பணக்காரர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வாழ்க்கையைக் கூட வாழாமல் 'இது ஒரு வாழ்க்கையா?' என்று  எட்டி உதைத்தவர்! தன்னை இங்கிலாந்து அரசியாக நினைத்து வாழ்ந்தவர்! நமது நாட்டிலும் அரசர்கள், அரசிகள் வாழத்தான் செய்கிறார்கள். இவர்கள்  எல்லாம் எந்த வகையிலும் ரோஸ்மாவோடு ஒப்பிட முடியாதவர்கள்.

நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அவர் செய்த ஊழல்களைப் பற்றி செய்திகள் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன. ஆனால் இப்போது தீர்ப்பு அளித்திருக்கிறார்களே இது யாராலும் மன்னிக்க  முடியாத ஒரு வழக்கு. கல்வி சார்ந்த எந்த ஒரு ஊழலையும் நம்மால் மன்னிக்க முடியாது. சரவாக் மாநிலத்தில் மிகவும் உட்புறத்தில் உள்ள பகுதிகளுக்குப் பிள்ளைகளின் கல்விக்காக சூரிய சக்தி மூலம் மின்சாரத் திட்ட தயாரிப்பில் தான் இந்த ஊழலை அவர் புரிந்திருக்கிறார். ஊழல் என்றால் சில இலட்சங்கள், சில கோடிகள் என்பதல்ல! சில நூறு  கோடிகள்!

இப்படி ஒரு ஊழலைப் புரிந்ததன் மூலம் அவர் கொடுக்கின்ற செய்தி என்ன? சரவாக் காடுகளில் வாழ்பவர்களின் பிள்ளைகள் கல்வியே பெறக் கூடாது என்பதாகத்தான் இருக்க வேண்டும். கல்வி கற்காத ஒரு சமுதாயம் தான் அவர் விரும்புகிற  சமுதாயம். 

ஒரு பிரதமரின் மனைவியே இப்படி இருந்தால் இந்த நாடு எப்படி உருப்படும்? அவரின் கணவரோ பிரதமராக இருந்தவர், இங்கிலாந்தில் படித்தவர். இப்படி ஓர் உயர்கல்வியைப் பெற்றவரின் மனைவிக்கு   சரவாக் குழந்தைகள் கல்வி கற்கக் கூடாது என்கிற எண்ணம் எப்படி வந்தது?

நாம் சொன்னது போல இது பிள்ளைகளின் கல்வி சம்பந்தப்பட்டது. கல்வியில் கைவைப்பவர்கள் தக்க தண்டனைப் பெற வேண்டும் என்பதில் எந்த சமரசமும் கூடாது.

தண்டனைக் கிடைத்ததுவுடனே அவரை சிறையில் தள்ளிவிட முடியாது. மேல்முறையீடு நடக்கும். அதற்கு மேல் இன்னும் மேல்முறையீடு நடக்கும். பின்னர் அவரை மாற்று இவரை மாற்று என்று மேலும் மேலும் இழுத்தடிப்பு நடக்கும். இதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை.

எது நடக்கும் எது நடக்காது என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் குற்றவாளி என்று சொன்னார்களே, முப்பது ஆண்டுகள் சிறை என்றார்களே அதுவே நமக்கு மகிழ்ச்சி தான்!

No comments:

Post a Comment