Monday 1 July 2024

பிரதமரின் முடிவை ஏற்றுக்கொள்வதா?


மெட்ரிகுலேஷன் கல்வி  நுழைவு  ஒவ்வொரு ஆண்டும் வரும் போதெல்லாம் அதனைப் பற்றியான சர்ச்சை நீளுகிறதே தவிர அதற்கு முற்றுப்புள்ளி  வைக்கும் விதமாக எதுவும் நடப்பதில்லை!

நமக்கும் இப்படி ஒரு இழுபறி ஏற்படுவது  நமது இனத்திற்கே ஒரு இழுக்காகவே  கருதப்படுகிறது.

அன்வார் பிரதமராக வந்தால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும்  என்று நினைத்தோம்  அவரும் பிரதமராக  வந்துவிட்டார் ஆனால்  இந்தியர்களின் எந்தப் பிரச்சனையும் தீரவில்லை. இப்போது அவர் மலாய் வாக்களர்களுடன்  போராடிக் கொண்டிருக்கிறார். நம்மை அவரால் ஞாபகப்படுத்திக் கொள்ளமுடியவில்லை.

கடைசியாக  மெட்ரிகுலேஷன் பற்றி அவர் சொல்லியிருக்கும் தீர்வு  எந்த வகையிலும் அதனைத் தீர்வாக எடுத்துக்கொள்ள முடியாது.  தீர்வு என்றால் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது அல்ல.

மலாய் மாணவர்களுக்கு 90 விழுக்காடு மெட்ரிகுலேஷன் இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படுகின்றன. அதில் 10ஏ எடுத்த மாணவர்களும் அடங்குவர். இந்திய மாணவர்களைப் பொறுத்தவரை  நாம் 2500 இடங்களை ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறோம்.  அதில் 10ஏ பெறுபவர்களோடு 5ஏ, 6ஏ, 7ஏ, 8ஏ 9ஏ இவர்களுக்கும் வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை.  இந்திய மாணவர்கள் பெரும்பாலும் B40 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்திய மாணவர்கள் போட்டி போடுவது M40, T20  மாணவர்களோடு என்பது பிரதமருக்குப் புரிந்தது தான்.  அதனை நிவர்த்தி செய்வது பிரதமரின் கடமை.

சென்ற ஆண்டு சுமார்  1100  இந்திய மாணவர்கள்  மட்டுமே மெட் ரிகுலேஷன் கலவி பயில அனுமதிக்கப்பட்டனர். இப்போது பிரதமரின் அறிவிப்பின்படி  இந்த ஆண்டு சுமார் 750 இந்திய மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.  காரணம் அவர்கள் தான் 10ஏ பெற்றிருக்கின்றனர். நமது தேவை எல்லாம் 2500 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே.

பிரதமர் வேறு எந்த முடிவை எடுத்தாலும் அது இந்திய மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவே செய்யும்.   மற்ற இன மாணவர்களைப் போல எங்கள் இந்திய மாணவர்களுக்கும் கல்வி பயில உரிமைகள் உண்டு. அதனைத் தடுக்க நினைப்பது இந்தியர்களுக்குச் செய்யும்  துரோகம் என்றே  கருதப்படும்.

No comments:

Post a Comment