Thursday 18 July 2024

தலைவர்கள் ஒன்றுசேர்ந்து!

 

தலைவர்கள், அதுவும்  இந்தியத் தலைவர்கள்,  ஒன்று சேர்வார்களா? இவர்களை ஒன்று சேர்ப்பது என்ன நடக்கிறமா காரியமா? 

தெரியாது. ஆனால் சமுதாய நலன் கருதி அவர்கள் ஒன்று சேர வேண்டும். இவர்கள்  பிரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.  தனிப்பட்ட முறையில் அடித்துக் கொள்ளுங்கள், கடித்துக் கொள்ளுங்கள்.   ஆனால் சமுதாய நலன் என்று வரும் போது  நீங்கள் ஒன்று சேர்ந்து தான் ஆக வேண்டும்.

மெட் ரிகுலேஷன் நுழைவுத் தேர்வில் ஏன் இத்தனை கெடுபிடிகள்?  தீர்க்க முடியாத பிரச்சனையா இது?  மிக அல்பமான விஷயம்.  சீனர்கள் அதுபற்றி அதிகமாக அலட்டிக் கொள்ளவதில்லை.  இன்னொரு காரணம் நமக்குக் கிடைத்துவிட்டால் அவர்களுக்கும் கிடைத்துவிடும்.  எதற்காக நாம் ஏன்  அதனைக் கேட்டு கெட்ட பெயர் வாங்க வேண்டும். இது தான் அவர்களின் மனப்போக்கு! ஆனால் நம் நிலையோ வேறு. நமக்கு அது கட்டாயம்.

கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவர்களுக்கு எல்லாம் ஒன்றுதான். அவர்கள் எதற்கும் தயார்!  ஆனால் நாம் தயாரில்லை.  நமக்கு அரசாங்கத்தின் உதவி தேவை.

ஒவ்வொரு ஆண்டும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் பலனில்லை.  அதனால் தான் நமது தலைவர்கள் ஒன்று சேர்ந்து  இதற்கு ஒரு  முடிவு காண வேண்டும். இனிமேலும்  இழுத்துக் கொண்டு போவதில் அர்த்தமில்லை.

அவர்கள் ஒன்று சேர்ந்து இதற்கு ஒரு முடிவு காணாவிட்டால்  நமக்குத் தெரிந்தது  ஒன்று தான்.   இவர்கள், இந்தத் தலைவர்கள், யாருக்கோ 'ஏஜென்' டாக பணிபுரிகிறார்கள் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது. யாருக்கு?  ஆமாம், நாட்டில் தனியார் கல்லூரிகள் பல இந்தியர்களால் நடத்தப் படுகின்றன.  அவர்களுக்கும் மாணவர்கள் தேவைப்படுகின்றனர்.
சீன மாணவர்கள் இந்தப்பக்கம்  வரமாட்டார்கள். அப்படியே வந்தாலும் போதுமான அளவு இருப்பதில்லை. அதனால் இந்திய மாணவர்கள் இவர்களுக்குத் தேவை.  அவர்களின் பற்றாக்குறைக்கு இந்திய மாணவர்கள் தேவைப்படுகின்றனர்.  அந்த ஒரு காரணத்தினால் தான்  இவர்கள், இந்தத் தலைவர்கள்,  பிரதமர் அன்வாருடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி இந்திய மாணவர்களை அதிகரிக்க எந்த முயற்சியும் எடுப்பதை தவிர்க்கிறார்கள்.  சாத்தியம் உண்டு அல்லவா?  அப்படி ஒன்றும் இவர்கள் எல்லாம் உத்தமர் அல்லவே! இவர்களின் லட்சணம் நமக்குத் தெரிந்தது தானே!

நமக்குத் தெரிந்ததெல்லாம் தலைவர்கள் ஒன்று சேர்ந்து பிரதமரைச் சந்தித்தாலே இதற்கு ஒரு முடிவைக் கண்டுவிடலாம்.  யார் யாரோ பேசிக் கொண்டிருப்பதைவிட  இவர்கள் நேரடியாகவே பிரதமரைச் சந்திக்கலாம் அல்லவா?  இடைத்தரகர் எதற்கு?

No comments:

Post a Comment