Saturday 10 February 2024

சீன நண்பர்களுக்கு வாழ்த்துகள்!

 


சீனப் பெருநாளன்று நமது  எண்ணங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்:

சீனர்கள் தங்களது மொழி மீது பற்றுள்ளவர்கள் - தமிழர்களும் தமிழ் மீது பற்றுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதாரம் சீனர்கள் கையில் - நமது பொருளாதாரம்  அவர்களை மிஞ்ச வேண்டும்.

சீனர்கள் கல்வித்துறையில் நம்மை மிஞ்சி விட்டார்கள் - நாம் அவர்களை மிஞ்ச வேண்டும்.

சீனர்கள் உலகெங்கிலும் வியாபாரம் செய்கிறார்கள் - உலகத்தையே நம் கையில் வைத்திருந்தோம்  நம்மால் முடியாதா?

காடோ மேடோ அங்கே சீனர்கள்  வியாபாரம் செய்கிறார்கள் - ஏன் நமது முஸ்லிம் தமிழர்கள்  செய்யவில்லையா? மற்ற தமிழர்களும் அவர்களைப் பின்பற்ற வேண்டும்.

சீனர்களுக்கு வேலை என்றால் அது வியாபாரம் மட்டும் தான் - நமக்கும் வேலை என்றால் வியாபாரம் என்பதாக அமைய வேண்டும். 

தாங்கள் பிழைக்க வியாபாரமே சிறந்த வழி என்கிறார்கள் சீனர்கள் - நமது பிழைப்பும் வியாபாரமாக இருக்க வேண்டும்.

வியாபாரத்தின் வழி யாரையும் நம் கையில் வைத்திருக்கலாம் - அது தான் நமது கொள்கையாகவும் இருக்க வேண்டும்.

சீனர்கள் தங்களது பொருளாதார பலத்தினால் நாடுகளைக் கூட வாங்குகிறார்கள் - நமக்குப் பலம் தான் வேண்டும். யாது ஊரே யாவரும் கேளிர் என்பது தான் நமது மரபு.


இந்த எண்ணங்களோடு நாம் இந்தப் புத்தாண்டை நண்பர்களோடு கொண்டாடுவோம்.  பொருளாதார சக்தி தான் உயர்வைத் தரும். நம்மைத் தலை நிமிர வைக்கும்.

வாழ்த்துகள்!

No comments:

Post a Comment