Thursday 15 February 2024

குற்றவாளிகளுக்கும் வயது வரம்பா?

 

குற்றவாளிகள் வயதானவர்களாக இருந்தால் அவர்களை மன்னித்து விடலாமா?

எந்த வயதானாலும் குற்றவாளி குற்றவாளிதான். அதற்கு வயது விதிவிலக்கல்ல.  குற்றம் செய்பவர் எந்த வயதிலும் குற்றங்கள் செய்யலாம். வயதானவர் என்றுதெரிந்து தானே  குற்றம் செய்கிறார்? தண்டனைக்கும் வயதுக்கும்  என்ன தொடர்பு?

ஒரு சில குற்றங்கள்  யார் வேண்டுமானாலும் செய்யலாம் மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு  வயதே தேவை இல்லை!   அதற்குத் தேவை எல்லாம் மனசாட்சி மட்டும் தான்.

பதவியில் இருந்த போது பல கோடிகளைத் திருடிய கேடிகள் பதவியிழந்த  பிறகு சட்டத்தை எதிர்நோக்க வேண்டி வரும் என்பதை மறந்துவிடுகின்றனர்.  ஆளுகின்றபோது இருக்கும் அதிகாரம் ஆளாதபோது அனைத்தும் பறந்தோடிவிடும்  என்பதைக்கூட அறியாத  அப்பாவிகளா இவர்கள்?

இன்று குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற பாலியல் சித்திரவதைகளுக்கு வயதையா பார்க்கமுடியும்?  கடுமையான தண்டனைகள் தான் கொடுக்க வேண்டி வரும். 

குற்றங்கள் என வரும் போது சமரசம் செய்து கொள்ள ஒன்றுமில்லை. ஒரு சில குற்றங்கள் மரண தண்டனைக்கு உட்பட்டவை.  இப்போது அதுவும் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு விட்டது.  சில குற்றங்களுக்கு மரண தண்டனை தேவை தான் என நினைக்கத் தோன்றுகிறது. தேவையற்ற கொலை, அப்பாவிகள் கொலை அதுவும் கொடுரமான கொலை - இதற்கெல்லாம் பாவ புண்ணியம் பார்க்க முடியுமா?  கஞ்சா போன்ற கொடுமையான  குற்றங்களை எண்ணிப்பார்க்க வேண்டும். அதனை பரப்புவதன் மூலம் இலட்சக்கணக்கான மக்களைப்  பாதிப்படைய செய்கின்றன. இதுபோன்ற குற்றங்களைச் செய்பவர்களை எப்படி மன்னிப்பது?

குற்றம் என்று வரும் போது வயது பற்றிய கவலையில்லை. சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். குற்றம் புரிந்தவர் யார் என்பது  நமக்குத் தேவையற்ற  ஒன்று. குற்றம் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட  வேண்டும்.

நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே! அன்றே பாடிவிட்டுப் போனார் புலவர்! அதுவே நமது நிலை!

No comments:

Post a Comment