Monday 5 February 2024

இந்த வீணடிப்புகளுக்கு யார் காரணம்?

 

இந்த வீணடிப்புகளுக்கு யார் காரணம்?

நாரவாயன்  தின்று கொழுப்பதற்கு நல்லவாயன் சம்பாதித்துக் கொடுக்க வேண்டியுள்ளது! 

சட்டவிரோதக்  குடியேறிகள்  நாட்டுக்குள் எப்படி வந்தார்கள்?  மேலே  விண்ணிலிருந்து குதித்து வந்தார்களோ! எப்படி நாட்டுக்குள் நுழைந்தார்கள்?    எப்படி உள்ளூர் வியாபாரங்களைக் கைப்பற்றினார்கள்?   நாட்டில் என்ன அதிசயங்களா நடந்து கொண்டிருக்கிறது?

அரசாங்கத்தில் பணிபுரிந்தவன் தான்  இந்த சட்டவிரோதிகளை உள்ளே விட்டவன்!  இப்போது அவர்களை சட்டவிரோதிகள்  என்று சொல்லி அவர்களை கைது செய்பவனும் அவனே!

நாட்டில் என்ன தான் கொடுமை நடக்கிறது?   சாதாரண கொடுமை அல்ல. பிற நாட்டவர்களை தாராள மனசுடன் உள்ளே விடுவது!  அப்புறம் ஏன் வந்தாய் என்று கைது செய்வது என்பது கொடுமையிலும் கொடுமை.  உள்ளே வர அனுமதி கொடுத்தவன் பை நிறைய பணத்தோடு  உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்! பணம் கொடுத்தவன்  வாழ்க்கையையே இழந்துவிட்டு  கலங்கிக் கொண்டிருக்கிறான்!

மனிதனுக்குப் பணம் அவசியம் தான்.  அதனை மனசாட்சியோடு சம்பாதிக்க வேண்டும்.   வெளிநாடுகளிலிருந்து  வரும் ஏழைகளை வயிற்றில் அடித்துப் பிழைப்பவனின்   வாழ்க்கை நாசமாகிவிடும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவனுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது! கடவுள் அவனை மன்னிப்பது  கிடையாது!

இப்போது விடிய விடிய கைது நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களே  இதற்கு முன்னர்  என்ன செய்தனர்?  விடிய விடிய பணத்தை எண்ணி  பாக்கெட்டுகளில் திணித்தனர்!   அப்போதும் அரசாஙத்திற்கு நட்டம் இப்போதும் அரசாங்கத்திற்கு நட்டம்!   நாட்டின் மதிப்புமிக்க பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்படுகிறது.  மக்களின் வரிப்பணம்  வண்டி வண்டியாகக் கடத்தப்படுகிறது.

நாட்டுக்கு விசுவாசமற்ற ஊழியர்கள்  நாட்டுக்கு ஏகப்பட்ட நட்டத்தை ஏற்படுத்துகின்றனர்.  யார் இவர்களைக் கேட்பது?  நட்டத்துக்கு மேல் நட்டம், என்ன தான் செய்ய?  ஒரு பக்கம் நாட்டுக்குள் வர அனுமதிப்பதும்  நாட்டுக்கு நட்டம் தான்.  உள்ளே விட்டு,  பின்னர் அவர்களைக் கைது செய்வதும்  நாட்டுக்கு நட்டம் தான்.   அரசாங்க ஊழியர்களால்  நாட்டுக்கு  ஏகப்பட்ட ஏன் கோடிக்கணக்கில் நட்டம், நட்டம், நட்டம்!

இந்த வீணடிப்பகளுக்கெல்லாம்  காரணம் அரசாங்க ஊழியர்கள் தான்!இவர்களை என்ன செய்யலாம்? அப்படியே நடவடிக்கை எடுத்தாலும்  மன்னிப்பு வாரியம் இருக்கிறது மன்னிப்பதற்கு!

No comments:

Post a Comment