Friday 9 February 2024

என்ன கொழுப்பு இவர்களுக்கு?

 

வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களுக்குக்  கொடுமையோ கொடுமைகள் நடக்கின்றன. சட்டங்கள் கடுமையாக இல்லாவிட்டால் அவர்களுக்கு எதுவும் நடக்கும், எப்படியும் நடக்கும்!

பெண்கள் ஏதோ தங்களது நாட்டிலிருந்து, பிழைப்புக்காக,  இங்கு வந்து வேலை செய்கின்றனர்.  பாவம்  ஏழைப்பெண்கள்.  ஆனால் இங்குள்ள சில பிச்சைக்காரர்கள் இந்தப் பெண்களை வேலையில் அமர்த்திக்கொண்டு  அவர்களைப் படாதபாடு படுத்துகின்றனர்.

ஒரு பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்தியதுமே  தங்களை ஏதோ கோடிஸ்வரர்களாக நினைக்கும் பெண்கள் தான் இப்படியெல்லாம் நினைக்கின்றனர்.  உண்மையில் பணக்காரர்கள் இப்படி நினைப்பதில்லை.  நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அதன் புத்தி என்னவோ மாறப்போவதில்லை! அதன் வேலையைத் தான் அது காட்டும்.  அப்படித்தான் இந்தப் புது எஜமானர்களும்!  

தங்களுக்கு ஏதோ ஒரு அப்பாவிப் பெண் கிடைத்துவிட்டால்  போதும்! அவரை 24 மணி நேரம் வேலை வாங்குவதும், சாப்பாடு ஒழுங்காகக் கொடுக்காமலும், அவர்களை அடிப்பதும், சூடு வைப்பதும்  சொல்லி மாளாது இவர்களின் கொடுமைகள்.  அதுவும் தமிழ் நாட்டிலிருந்து வரும் பெண்களை இவர்கள் மனிதர்களாகக் கூட கருதுவதில்லை.  இவர்கள் செய்த கொடுமைகளினால்  பலர் இறந்திருக்கின்றனர்.  இப்படிப்பட்டவர்களைத் தூக்கில்  போட வேண்டும். அது தான் தண்டனை. இதைவிட குறைவான தண்டனைகளெல்லாம் இவர்களுக்கு  வலியை ஏற்படுத்தாது.

இவர்களைப் போன்ற புது புது எஜமானர்களுக்குத் தண்டனை என்றால் என்னவென்று தெரிந்திருக்க வேண்டும்.  குற்றத்தின் கடுமை தெரிந்தால்  மட்டுமே இவர்கள் பயப்படுவார்கள்.  இப்போது தண்டனைகள்  கடுமையாக இல்லை.  அதனால் பரவலாக வீடுகளில் இது போன்ற குற்றங்கள் நடைபெறுகின்றன.

வருங்காலங்களில்  தண்டனைகள்  கடுமையாக்கப்பட வேண்டும். வீட்டுப் பணிப்பெண்கள் என்றாலும் அவர்களும் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்.  இங்கு யாருக்கும் யாரும் அடிமைகள் அல்ல.  அவர்கள் செய்யும் வேலைக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.  இதில் யாரும் உயர்ந்தவர்கள் அல்ல. எல்லாமே உயர்ந்தவர்கள் தான்.

அரசாங்கம் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் கடுமையானதாகக் கருத வேண்டும்!

No comments:

Post a Comment