Monday 12 August 2024

வன்முறை வேண்டாமே!

 


பொதுவாகவே வன்முறை என்பது கண்டிக்கதக்கது தான்.  அதுவும் பெரும்பான்மை சமூகம் சிறுபன்மையினரைத் தாக்குவதை  சகித்துக் கொள்ள முடியாது.  ஆனால் அது தான் பெரும்பாலான நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது.

எந்த சமயமும் அதற்கு விதிவிலக்கல்ல.  இன்று வங்காளதேசத்தில்  நடப்பது: வங்காளதேச இஸ்லாமியர்கள்  சிறுபான்மை இந்துக்கள், கிறிஸ்துவர்கள், புத்த மதத்தினர்  ஆகியோரைத் தாக்குவது மட்டும் அல்ல அவர்களின் வழிபாட்டுத்தலங்களையும் தகர்த்தெறிகின்றனர்.

வன்முறை என்று வந்துவிட்டால் உயிர்ச்சேதம்  ஏற்படத்தான் செய்யும். அதிலும் குறிப்பாக  பெண்கள், குழந்தைகளுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை.  எல்லா நாடுகளிலும் அப்படித்தான் வன்முறையாளர்கள்  நடந்து கொள்கின்றனர்.   எல்லாமே எல்லை மீறும்போது எந்த உபதேசமும்  காதில் விழாது!

எல்லா மதத்தினரும், வன்முறையாளர்களாக மாறும் போது,  மதம் பற்றியான உணர்வே இருப்பதில்லை!   யார் உயர்ந்தவன், யார் தாழ்ந்தவன்  என்கிற பாகுபாடு இல்லை.  நான் உயர்ந்தவன் நீ  தாழ்ந்ததவன், என் மதம் உயர்ந்தது உன் மதம் தாழ்ந்தது  என்று பேசுபவன் எல்லாம்  வன்முறை என்று வரும் போது  மிக மிகக் கேடுகெட்டவனாக  மாறிவிடுகிறான்!

மதங்கள் எல்லாம் நல்லவைகளைத்தான்  போதிக்கின்றன.  ஆனால் மனிதனால்  நல்லவைகளைத்தான்  பின்பற்ற  முடிவதில்லை.  அது எந்த மதமாக இருந்தால் என்ன?  அதைப் பின்பற்றுபவன்  மாறிவிடுகிறானா? நல்லவனாகவா?  இல்லை! இல்லை!  கெட்டவனாகத்தான் மாறுகிறான்!

மதங்கள்  மனிதனை மாற்றும் என்கிற நம்பிக்கையே நமக்கு இல்லை.  இது நாள்வரை இல்லை என்கிற போது இனி மேலும்  மாற்றும்  என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.  அடிப்படையில் மனிதன்  ஒரு மனித மிருகம். அவன் மிருகமாகத்தான் இருப்பான்.

வங்காளதேசத்தில் நடப்பது சரியில்லை என்றால் மற்ற நாடுகளில் நடப்பது சரியா என்கிற கேள்வி எழத்தான் செய்யும். அதற்கு நம்மிடம் பதில் இல்லை.  மதங்களால் மனிதர்களை ஒன்று சேர்க்க முடியாது என்பது மட்டும் உண்மை!

No comments:

Post a Comment