Tuesday 27 August 2024

நாய்களே நன்றி!


 என்ன தான் மனிதர்கள் பல முயற்சிகளை  மேற்கொண்டாலும் , அந்த முயற்சிகள் பயனளிக்காத போது நாய்களைத்தான் மனிதர்கள் நம்பவேண்டியுள்ளது.

நூறுக்கு மேற்பட்ட மனிதர்கள் - காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள, இண்டாவாட்டர் பணியாளர்கள் -  இன்னும் வேறு துறைகளில் உள்ளவர்கள், இப்படி எண்ணற்றவர்கள் இருந்தும்,  முடியாத போது,   கடைசியில் மோப்ப நாய்களைத்தான் கொண்டுவர வேண்டியுள்ளது!  நிச்சயமாக மனிதர்களை விட அவைகளுக்கு மோப்பம் பிடிக்கும் சக்தி அதிகம் என்று நம்பலாம்.

குழியில் இறங்குவதற்கு முன்னரே  அந்த நாய்கள் ஓரளவு கணித்து விட்டதாகவே நமக்குத் தோன்றுகிறது.  இருந்தாலும் பிரச்சனை என்னவெனில்  அடியில் நீரோட்டத்தின் வேகமே  அவர்களுக்குத் தடையாக இருந்தது.  அதனால் எந்தவொரு தேடுதலும் மீட்புக் குழுவினருக்குச் சாதகமாக இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

உண்மையில் இந்நிகழ்வு பெரியதொரு பேரிடர் என்று தான் சொல்ல வேண்டி உள்ளது.  உண்மையைச் சொன்னால் அது ஒரு விபத்து.  ஆனால் நடக்கக் கூடாத விபத்து.  மனித நடைபாதையில் இப்படி ஒரு விபத்தை நாம் கேளவிப்பட்டதில்லை.  

இது எப்படி நடக்க முடியும் என்கிற கேள்வி நம்முள் எழுந்து கொண்டுதான் இருக்கிறது.  நடைபாதைகளை  அமைக்கும்  குத்தகையாளர்களின் தகுதி பற்றி நாம் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது  நம்மைப்போன்றவர்கள் வேறு என்ன செய்ய முடியும?  

எத்தனை பேர் முயற்சிகள் செய்கின்றனர்?  மனிதர்களால் முடியவில்லை என்றான பிறகு  நாய்கள் தான் கதாநாயகர்களாகத்  தெரிகின்றன!  நம்முடைய பிரார்த்தனை எல்லாம் எந்த ஒரு உயிர் சேதமும்  ஏற்படக்கூடாது  என்பது தான்.  நாய்களே ஜாக்கிரதை என்று தான் படித்திருக்கிறோம். இப்போது அந்த நாய்களையே நம்பவேண்டிய சூழல்! இது தான் காலத்தின் கோலமோ!

நல்லதையே எதிர்பார்ப்போம்!  அந்த நாலு நாய்களுக்கும் நன்றி!

No comments:

Post a Comment