Saturday 31 August 2024

தமிழ் நூல்களுக்குத் தடையா?


 பொதுவாகவே நமது அரசாங்க நூல்நிலயங்களில்  தமிழ் நூல்கள் இடம் பெறுவதில்லை  என்பது ஒன்றும் புதிய செய்தியல்ல.  தமிழ் புத்தகங்களையே இடம் பெறச் செய்யாமல் அப்படி ஒரு நிலையை உருவாக்கி விட்டார்கள் பதவியில் இருந்தவர்கள்.  அதாவது இந்தியர்கள் நூல்நிலையங்களுக்குள்  வரவேண்டாம், படிக்க வேண்டாம்  என்பதில் கவனமாக இருந்தார்கள்.  அதனாலேயே  நாம் நூல்நிலையங்களுக்குச் செல்லுகின்ற பழக்கமே இல்லாமல் போய்விட்டது.

அப்போது அப்படி இருந்தது என்பது உண்மை. ஆனால் எப்போதும் அப்படி இருக்க முடியாது.  சீன மொழி புத்தகங்கள் இருக்கும் போது அது ஏன் தமிழ் மொழி புத்தகங்களுக்கு மட்டும் தடை?   இந்தியர்கள் மட்டும்  படிக்கக் கூடாது என்பதில் ஏன் அவ்வளவு அக்கறை?

இப்போது தமிழ் எழுத்தாளர் சங்கம்  நல்லதொரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறது.  மாநகராட்சி மன்றத்தின் கீழ் செயல்படும் நூலகங்களில் தமிழ் நூல்கள்  இடம் பெற வேண்டும் என்கிற கோரிக்கையை  தமிழ் எழுத்தாளர் சங்கம்  வைத்திருக்கிறது.

நாட்டில் மூன்று இனங்கள் வாழ்கின்றோம்.  அது ஏனோ அரசாங்கமே  பிரித்து ஆள்கின்ற  வேலையைச் செய்கின்றது. நாட்டில் மூன்று மொழிகள். தேசிய மொழி, சீன மொழி, தமிழ் மொழி. இதனை  நூல்நிலையங்களில்  உள்ளவர்கள் அறியாதவர்களா என்ன?  சீன மொழி பத்தகங்கள் வைக்கும் போது, தமிழ்ப்புத்தகங்களும்   வைக்கைப்பட வேண்டும்  என்பது மட்டும் அவர்கள் ஏன் அறியாதவர்களாக இருக்கின்றனர்?  அறியாதவர்கள் என்பதைவிட அவர்கள் புறக்கணிக்கின்றனர்  என்பது  அவர்களுக்கே தெரியும்.  நிச்சயமாக அங்குப் பணிபுரியும் நூலகர் தான் அதற்கானப் பழியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.  இது போன்று தங்களது வேலையில் அலட்சியமாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு.

அதே போல நாமும் நமது பங்குக்கு அந்த  நூல்நிலையங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அது நமது கடமைகளில் ஒன்றாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.   குறைந்தபட்சம் நூல்நிலையங்களின் அருகே இருப்பவர்கள், வாய்ப்பு உள்ளவர்கள்  தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

No comments:

Post a Comment