Monday 5 August 2024

ஏன் மிஞ்ச முடியவில்லை?

 

சீனப் பள்ளிகள் தங்களது வளர்ச்சிக்கு அதாவது கட்டடங்கள் கட்டுவது போன்ற தேவைகளுக்கு,  நீண்ட நாள்களாகவே  மதுபான நிறுவனங்கள் உதவி வருகின்றன.  அவ்வப்போது சீனப்பள்ளிகள் நடத்தும் கட்டட நிதிகளுக்கு  உதவுபவர்கள் பெரும்பாலும்  இந்த நிறுவனங்கள் தான். அரசாங்கத்தின் உதவி இல்லாததால் பள்ளிகள் தாங்களே  பணத்தை திரட்டும்  நிலையில் உள்ளன.  அதற்குப் பெற்றோர்களும் உதவுகின்றனர்.

நாம் இந்த சர்ச்சையில் இறங்கவில்லை.  மதுபான நிறுவனங்கள்  பள்ளிகளுக்கு  அளிக்கும்  இந்த நிதி உதவியினால்  பள்ளிகளின் கலவித்தரம்  பாதிக்காப்படுகின்றனவா  என்பது தான்  நமது கேள்வி.

இன்று நாட்டில் மூன்று மொழி பள்ளிகள் இயங்குகின்றன. தேசியப்பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகள், சீனப் பள்ளிகள்.  இதில் மலேசியப் பெற்றோர் பெரும் பகுதியினர் தேசியப்பள்ளிகளுக்கே தங்களது பிள்ளைகளை அனுப்புகின்றனர். தேசியப் பள்ளிகளே பெற்றொரின் முதன்மையான  தேர்வு என்பதில் ஐயமில்லை.

ஆனால் கல்வியில் தேர்ச்சி, வெற்றி  என்று வந்தால் சீனப்பள்ளிகளும், தமிழ்ப்பள்ளிகளும் தான் முக்கியமாக நிற்கின்றன. அதுவும் சீனப்பள்ளிகளையே  பெற்றோர்கள் விரும்பும் பள்ளிகளாக அமைந்து விட்டன.  தரம் என்றால் அது சீனப்பள்ளிகள் தான்  என்கிற நிலைமையை அவர்கள் உருவாக்கிவிட்டனர்.  கல்வியில் சீனப்பள்ளி மாணவர்கள் தான் முன்னணியில் இருக்கின்றனர்.  அவர்களை மிஞ்ச ஆளில்லை என்கிற நிலைமை  தான் இப்போதும்.  தமிழ்ப்பள்ளிகள்,  இருக்கின்ற வசதிகளைக்  கொண்டு அவர்களும் தரத்தில் உயர்ந்த நிலையில் தான் இருக்கின்றனர். 

ஆனால் தேசியப்பள்ளிகளின் நிலைமை வேறு.  தனியார் டியூஷன் இல்லாமல்  அவைகளின் தரம் கீழ்நோக்கிப்  போய்விடும்!  தரமில்லாக் கல்வி என்றால் அவைகள் தேசியப்பள்ளிகள் தான்.  இதனைப் பெற்றோர்கள் அறிந்திருக்கின்றனர். அதனால் தான் நாடெங்கும் டியூஷன்  பள்ளிகள்  ஏகப்பட்டவை நிறைந்துவிட்டன.

சீனப்பள்ளிகள் மதுபான நிறுவனங்களின் விளம்பரங்களை நம்பியிருந்தாலும்  அவர்களின் கல்வித்தரம்  எந்தவகையிலும் தாழ்ந்து போகவில்லை. அவர்களின் தரம் தான் முதன்மையான நிலையில்  இப்போதும் பேசப்படுகின்றது.  தேசியப்பள்ளிகள் ஏன் சீனப்பள்ளிகளை மிஞ்ச முடியவில்லை?  அது முடியாது என்பது மட்டும் தெளிவு. இது வெறும் அரசியல்! வேறு எந்த வெங்காயமும் இல்லை!

No comments:

Post a Comment