Wednesday 7 August 2024

அமைச்சரவையில் மாற்றமில்லை!


 அமைச்சரவையில் மாற்றம் வரும் என்பதாக வெளியான ஆருடங்களை மறுத்திருக்கிறார் பிரதமர்.

அப்படியே மாற்றம் என்றாலும் அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் வேண்டுமானால் சாத்தியம் உண்டு  என்று அவர் கூறியிருக்கிறார். இது போன்ற செய்திகள் புரளியாக இருக்கலாம்.  அல்லது உண்மையாக நடக்கக் கூடிய சாத்தியமும் உண்டு.

பொதுவாக இது போன்ற செய்திகள் வருவதும் 'அப்படியெல்லாம் ஒன்றுமில்லை'  என்று மறுப்புதும்  எல்லாகாலத்திலும் உண்டு.  புதிது அல்ல.  ஆனால் வியப்புக்குறியது  என்னவென்றால்  இது போன்ற புரளிகளை  முதலில் கிளப்பிவிட்டு பின்னர்  அதனை  உண்மையாக்குவது  அரசியலில் இதெல்லாம சாதாரணம்  தான்.  அதுவும் அமைச்சரவை மாற்றம் என்பது முதலில் புரளியாகத்தான் வெளியாகும்.  அதன் பின்னர் தான் அது உண்மையாகும்.  இப்படித்தான் அது நடக்கும் என்பதை இதற்கு முன்னர் நாம்  பார்த்திருக்கிறோம்.

சரி,  அப்படியே நடக்கும் என்றே வைத்துக் கொள்வோம்.  அதனால் என்ன நாட்டில் பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது?   ஒன்றுமில்லை என்பதைத் தவிர  சொல்ல என்ன இருக்கிறது?  இப்போது என்ன நடக்கிறதோ அதிலே எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.  அப்படியே மாற்றுவதால் நாடு தலைகீழாக மாறப்போகிறதா?  ஒன்றுமில்லை!  ஏதோ ஒரு சிலரைத் திருப்திபடுத்துவதைத் தவிர வேறொன்றொமில்லை.

மாற்றம் என்றால் நாட்டில் விலைவாசிகள் குறைய வேண்டும்.  வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.  குறிப்பாக இந்தியர்களின் வேலை வாய்ப்புகள் திருப்திகரமாக இல்லை.  இந்தியர்களில் பலர் சிங்கப்பூரை நோக்கிப் படையெடுப்பதாகவே தோன்றுகிறது.  அப்படித்தான் சொல்லப்படுகிறது.

ஆக, அமைச்சரவை மாற்றம் என்பது பொதுமக்களைப் பொறுத்தவரை  தேவையற்ற ஒன்று.  ஒருவேளை அரசியல்வாதிகளுக்குத் தேவையான ஒன்றாக இருக்கலாம்.  அதுபற்றி நமக்குக் கவலையில்லை.   மக்களுக்குத் தினசரி வாழ்க்கைக்கு என்ன தேவை என்பது தான் முக்கியம்.

நமக்கு அப்படி ஒரு அமைச்சரவை மாற்றம் தேவையில்லை. அது எந்த வகையிலும் நமக்குச் சோறு போடப்போவதில்லை.   மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க என்ன தேவையோ  அந்த மாற்றமே நமக்குத் தேவை.

அமைச்சரவையில்  எதையும் வெட்டிக் கிழிக்க வேண்டாம்! இருப்பதே போதும்!

No comments:

Post a Comment